Tuesday, January 12, 2010

நீங்களும் மிஸ் பண்றீங்களா

என்னதான் கிராபிக்ஸ் வந்தாலும் என்ன தான் புதுவகையான கேமரா வந்தாலும் என்ன தான் ரீமிக்ஸ் பாடல் வந்தாலும் என்ன தான் (அட நிறுத்துப்பா)

பழைய தமிழ் படங்களில் வழக்காமாயிருக்கும் ஆனால் இப்போ மிஸ் பண்ணுகிற சில விஷயங்கள் பற்றி பேசலாம்

நோ நோ ஓட்ட போவதில்லை பாராட்டா போகிறோம்

அழகான ஆலமரத்தடி பஞ்சாயத்து கிராமத்தின் பழக்க வழக்கங்களை போகிற போக்கில் சொல்லுவது உதாரணம் சின்ன கவுண்டரில் வரும் அந்த இலைக்கடியில் தாலி சீன் அது என்னப்பா ஊர்ச்சோறா??

பெரும்பாலான இளையாராஜாவின் அழகான பாடல்கள் குத்து பாட்டாயிருந்தாலும் கெத்தாயிருக்கும்

அப்புறம் அந்த செவன்த் மைல் சிக்ஸ்த் மைலில் போய் பாடும் லாலாலக்கள் படத்தோட சேர்ந்து வரும் காமெடி

பாடல்கள் எல்லாம் ஒரே மாதிர் முதல் நாலும் வரி பாடி விட்டு அப்புறம் வரும் மியூசிக்

சண்டை காட்சிகளில் வரும் 'அவுஜிவா' , 'டியுஷும்'

ரெண்டு துணை நடிகர்களை உடம்பு புல்லா ஆயில் தடவி விட்டு அந்த துணை நடிகன் துணை நடிகையை தடவுவதை பார்த்து ஹீரோவும் ஹீரோயினும் தடவி கொள்வது சாரி காதல் கொள்வது

அப்பாலிக்கா ரோஜாவுக்கு பின்னாடி கசமுசா செய்வது(நடிகை ரோஜா இல்ல!!!) சைக்கிளில் பின்னாடியே போய் பாடும் பாடல்கள்
ஹீரோக்கு நாயோ குதிரையோ துணையிருத்தல்

கடைசியில் போலீஸ் வருவது ஹீரோயின் தவற விட்ட தாவணி கரெக்ட்டா ஹீரோ தலையில் விழுவது மலையில் இருந்து 1 23 சொல்லி குதிப்பது ஆற்றில் பாவாடை கட்டி குளிப்பது.....உங்களுக்கு தோனுறது சொல்லுங்கப்பு

இப்படி நிறைய

Sunday, December 06, 2009

சடங்கு!!!

சடங்கான அன்னிக்கு மாரியக்கா
குச்சிக்குள்ளேயும் மஞ்சத் தண்ணிக்கும்
உட்கார மாட்டேன்னு பெருஞ்சண்டை போட்டா

புதுப்பிள்ளைய காத்துக்கருப்பேதும் அண்டிருக்கும்ன்னு
சொல்லி முட்டை ஓதி பேயோட்ட வந்த
கருப்பனையும் அடிச்சி விரட்டிபுட்டா

பிரவு கலியாணமாகி மெட்ராசு போனவ
அவ மவ சடங்கு கழிக்க ஊருக்கு வந்தா

தெருவ வளைச்சு பந்தல் போட்டு
மவள குத்த உட்கார வச்சு முத தண்ணிய
ஊத்தும் போது மாரியக்கா முவத்துல
எந்த சலனமும் இல்லை
அவ மவளும் அடம்புடிக்கல!!


எங்க ஊர் வழக்கில் ஒரு கவிதை..கவிதைன்னு இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இந்த மாதிரி விஷயங்களை சொல்ல இந்த வடிவும் தான் ஏதுவாயிருக்கிறது

பிரவு- பிறகு
குச்சி -ஓலைக்குடிசை

பள்ளிகூட நண்பர்கள்

சுடலைமாடி-பள்ளிகூட நண்பர்கள்



தங்கராஜ் மட்டுமல்ல இன்னும் ஏராளனமான பள்ளி நண்பர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தியிருக்கிறார்கள்,வேலைக்கு போயிருக்கிறார்கள்,இறந்து போயிருக்கிறார்கள்

வறுமையின் உச்சம் அவர்களை உலகின் எல்லையை நோக்கி துரத்திக்கொண்டிருந்தது அவர்களும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

1 லிருந்து 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் படித்தவள் 'சுடலைமாடி' ,துடுக்கானவள். ஆண்களின் சார்பாக எல்லாவற்றுக்கும் நான் முன் நிற்பேன் பெண்கள் சார்பில் இவள்.


பசங்களை அடிக்கவும் தயங்கமாட்டாள், அவளிடன் நானும் அடிவாங்கியிருக்கேன் என்பதை இப்போது நினைத்து பார்க்க சிரிப்பாயிருக்கிறது.படிப்பில் ரொம்ப சுமார்
'சுடலைமாட சுவாமி' என அவளை கிண்டலடிப்போம்,அவள் எங்களை விரட்டுவாள் . அப்போது நாங்கள் மேடை கிளாசில் இருப்போம், மேடையிலிருந்து குதித்து பசங்க பாத்ரூம் பார்க்க ஓடிடுவோம் அவளால் தொடர்ந்து துரத்த முடியாமல் தயங்கி நிற்பாள்...

ஒரு முறை நியாபக திறன் போட்டி நடந்தது ..இந்த போட்டியில் ஒரு மேஜை மீது நிறைய பொருட்கள் வைத்திருப்பார்கள், ஒரு நிமிடம் காண்பித்து விட்டு உடனே ஒரு துணி போட்டு மூடி விடுவார்கள். அதன் பின் அங்கே என்னவெல்லாம் பொருட்கள் இருந்தது என ஒரு பேப்பரில் எழுத சொல்வார்கள்.

சுடலை மாடி தான் முதல் பரிசு வாங்கினாள்..நான் 10 பொருட்கள் வரை எழுதி விட்டு லட்சுமி நரசிம்மனின் பேப்பரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன்..அவளுடய உடை மிகவும் கசங்கி இருக்கும், பல்கள் எல்லாம் காவி நிறமாயிருக்கும் அவளுக்கு இன்னொரு பெயர் 'சூத்தபல்லி' ...

5 ஆம் வகுப்புக்கு பிறகு நான் சத்திரம் பாரதி மேல்நிலைபள்ளிக்கு போய் விட்டேன் இங்கே 6 முதல் 10 வரை ஆண்கள் , 11 முதல் 12 வரை ஆண்களும் பெண்களும் படிப்பார்கள். பெண்கள் உயர் நிலைபள்ள்ளியில் 6 முதல் 10 வரை இருக்கும்..அதற்கு பின் அவளை பார்க்கும் வாய்ப்புகள் மிக குறைந்து விட்டது..


அவளை நான் மறுபடி வேறொரு சந்தர்பத்தில் சந்தித்தேன்..ஒரு நிமிசம் தான் பார்த்தோம்..இது அவள் தான் நான் உறுதிபடுத்திக்கொள்வதற்க்குள் அவள் கண்ண்லிருந்து மறைந்து விட்டாள்..


11 ஆம் வகுப்பு விடுமுறையில் எல்லாரும் 12 ஆம் வகுப்பு பாடங்களுக்கு டியூசன் போக ,நான் என் மனைவி படிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக கெமிஸ்ட்ரியும் மாத்ஸும் சேர்ந்தேன்..கெமிஸ்ட்ரி டியூசன் திருமலைபுரத்திலிருந்தது

திருமலைபுரம் எங்கள் ஊரிலிருந்து 4 கீமீ , மாலை 4 முதல் 6 வரை டியூசன் இருக்கும் ,போகும் போது வேனில் போய் விடுவோம் .வரும் போது நடந்தே வருவோம் எல்லாரும்...முதலியார்பட்டி ரயில்வே கேட் அருகில் வழக்கமான நாங்கள் ஆனியன் பக்கோடா வாங்கும் கடையில் எல்லாரும் வாங்கி கொண்டு, நிலக்கடலை, சிகரட்(ஒருத்தன் மட்டும் அடிப்பான்) நடக்க ஆரம்பிப்போம்....

அன்று மாலை 5 மணியிருக்கும் எல்லாரும் அய்யம்பிள்ளையார் குளத்தின் கரையில் நடந்துகொண்டிருந்தோம்...எங்களை ஒரு டிராக்டர் பெரும் இரைச்சலுடன் கடந்து சென்றது..டிராக்டரில் என்னை என் பெயரை சொல்லி அழைத்தது போல் தோன்றவே சட்டென்று திரும்பி பார்த்த போது சுடலை மாடி நின்றுகொண்டே பயணம் செய்துகொண்டிருந்தாள்...

அவளுக்கு எந்த விதமாக நான் அவளை கண்டு கொண்டதை தெரிவிக்க என யோசிக்கவும் கணமில்லா அந்த நிமிடத்தில் அவள் பயணம் செய்த டிராக்டர் வெகுதூரம் போயிருந்தது..சுடலைமாடியே தான் அவள், அந்த காவி பற்கள் ,அதே கலைந்த முடி....

அவளுக்கு இந்நேரம் திருமணமாகியிருக்கும் , பிள்ளைகளும் பிறந்திருக்கும் அவள் குழந்தைகளுக்கு அவளும் சாமியின் பேர் ஏதாவது சூடியிருக்கக்கூடும்...அவளுக்கு இப்போது என்னை நினைவிருக்குமா..எந்த சந்தர்ப்பத்திலாவது என்னை பற்றி யோசித்திருப்பாளா...நான் இங்கே அவளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்ட விஷ்யம் அவளுக்கு தெரிய வருமா???

எண்ணற்ற கேள்விகளுடன் நான்...............

பள்ளிகூட நண்பர்கள்

பள்ளிகூட நண்பர்கள்

தொடக்க பள்ளியில் உங்களுடன் படித்த நண்பர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று வரை யாராவது LKG ல் இருந்து உங்களுடம் படித்து கல்லூரி/வேலையிலும் தொடர்கிறார்களா??


சில சமயம் என் பள்ளி வாழ்க்கையை பற்றி யோசித்து பார்க்கும் போதும் எழும் கேள்விகள் தான் மேலே...


எனக்கும் இன்னமும் நியாபமிருக்கிற சில நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என தெரிய வில்லை..அவர்களை எங்கேயாது எப்போவாது பார்க்க நேரும் போது பெரும்பாலும் பேச முடிவதில்லை ,சற்றென கடந்து போயிருக்கிறேன், வீட்டிற்கு வந்த போது ஏன் நான் அவன்/அவளோடு பேச வில்லை என எனக்கே என் மேல் கோபமாய் வரும்..


நான் சில பள்ளி நண்பர்களை இன்று மீண்டும் பார்க்க விரும்புகிறேன் , பார்த்தும் இருக்கிறேன்.

ஆம் என் திருமணத்தின் போது பொட்டல்புதூரில் பஸ் திருப்பம் பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடையில் வேலைபார்க்கும் தங்கராஜை போய் பார்த்து திருமண பத்திரிக்கையை கொடுத்தேன்.





தங்கராஜ் என்னுடம் 6ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரை படித்தான் , என்னுடனே இருப்பான், என் வீட்டிற்கெல்லாம் வந்திருக்கிறான்.புட்பாலில் எப்போதும் என் டீமில் தான் விளையாடுவான்.உயரம் கொஞ்சம் கம்மியாய் இருப்பதால் அவனை பசங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவார்கள் ஆனால் அவன் யாரையும் பார்த்து பயந்ததில்லை.அவனை என் மனதில் பதிய செய்த ஒரு நிகழ்ச்சி இது..

"ஒரு முறை SL சார் வகுப்பில் கொய்யாக்கா தின்று கொண்டிருந்தோம் எங்கள் பெஞ்சில் ஆனால் இவன் மட்டும் அவர் கண்ணில் பட்டு விட்டான், அவர் இவனை பார்க்கும் போது சவைத்து கொண்டிருந்தான் , அவ்வளோ தான் அவருக்கு வந்ததே கோபம் , கையால் தான் அவர் எல்லாரையும் அடிப்பார், முதுகில் அடித்தான் 'தொம்' என வகுப்பறையே அலரும்..அவனை வரவைத்து ஓங்கி அடிக்க போனார் திருப்பி நிப்பாட்டி ஆனால் அவன் உருவிக்கொண்டு கீழே படுத்து விட்டான் , எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்து விட்டது , மறுபடு SL சார் தன் தொப்பையயும் பொருட்படுத்தாமல் குனிந்த அவனை நிப்பாட்டி அடிக்க போய் அவனும் மறுபடி அதே மாதிரி படுக்க எல்லாரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தோம் , sL சாருக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அதே சமயம நம்மை இப்படி படுத்துகிறானே என அவமானாய் இருந்திருக்கும் போல முதுகில் அடிக்க ஆரம்பித்தார் 10 அடிகளில் 4 அடி தான் பட்டிருக்கும் அவர் சோர்ந்து போய் வகுப்பை விட்டு வெளியில் போக சொன்னார் அவனை."

அவன் நான் போய் பைக்கை நிப்பாட்டி அவனை அழைத்த போது டக்கென்று என்னை அடையாளம் கண்டு கொண்டான் ..'ஏலே நல்லாயிருக்கியா' என்றான் எங்களூருக்கு செல்லும் போது மட்டும் எப்படியோ தெரியாது இந்த 'ஏலே' ஒட்டிக்கொள்ளும் ஆனால் அதுக்காக தமிழ் சினிமாவில் வருவது போல 100 வார்த்தைக்கு 110 தபா ஏலே சொல்ல மாட்டோம்..சினிமாவில் வருவதெல்லாம் மிகைபடுத்த பட்ட காட்சிகள்..


அவனது முதலாளி என்னை அவனையும் ஒரு முறை முறைத்தார்,பின்னார் வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்..

'நான் நல்லாயிருக்கேன் ,பஸ்ஸில போவும் போது உன்ன பார்த்தேன்,இங்க தான் வேலை செய்தியா'

'ஆமாம் நீ எங்க இருக்க என்ன வேல பாக்க'

'நான் மெட்ராசில இருக்கேன்,சாப்ட்வேர் கம்பெனில, எனக்கு கல்யாணம் தென்காசில வச்சு வந்துரு' என பத்திரிக்கை நீட்டினேன்.


என் திருமணம் நடந்தது வியாழகிழமை, அவன் வர மாட்டான் என நினைத்தது என் தவறு ..தாலி கட்டு நடந்த கோவிலுக்கும் , மற்ற நிகழ்ச்சிகள் நடந்த மண்டபத்திலும் , இறுதியில் ரிசப்சனிலும் இருந்தான்..

அவனுக்கு அன்றைய சம்பளம் போயிருக்கும், ரிசப்சன் இடைவெளியில் அவனிடம் போய் பேசினேன் என் நண்பர்களை அறிமுகபடுத்தினேன்..திடீரென என் கையை பிடித்து ஒரு கவரை அழுத்தினான் கையில்..டேய் என்னடா என்பதற்குள் ..நான் கிளம்புறேண்டா ஊருல பார்க்கலாம் என கிளம்ப எத்தனித்தான்

'டேய் மேடைக்கு வாடா போட்டோ எடுக்கலாம்'

'இல்லலே இருக்கட்டும் ' என கிளம்பி சென்று விட்டான்..

அன்று இரவு மொய் கவரில் அவன் கவரை எடுத்து பார்த்தேன் 'தங்க ராஜ், கடையம்' என்று அதே கோணல் மானல் எழுத்துக்கள்..உள்ளே 20 ரூபாயும் இருந்தது !!!..

அந்த கவர் இன்னுமும் என் டைரியில் இருக்கிறது..

நேயர் விருப்பம்

முன்னாடி மாதிரி டிவி பார்ப்பது கிடையாது இப்போதெல்லாம் கொஞ்ச நேரம் இங்கிலிபிஸ் அப்புறமாட்டி கொஞ்சம் காமெடி வெள்ளி கிழமை நைட் மட்டும் நைட் பதினோரு மணிக்கு மேல அவசரப் படாதீங்க இந்த நேரத்துல தான் சில சானல்களில் அருமையான தமிழ் பாடல்கள் போடுவான் ..மூடுபனி,கடலோர கவிதைகள் ன்னு தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களை ரசிக்கலாம்.



வீட்டுல அம்மிணி டான்ஸ் புரோகிரமோ மியூசிக் சானல்கள் பார்க்கும் போது போய் ரிமோட்டுக்கு சண்டை போடுவதுண்டு சண்டையில் தோற்று போகும் பட்சத்தில் அந்த மொக்கை நிகழ்ச்சிகளை பார்க்க நேர்வதுண்டு ...அப்படி தான் ஒரு நாள் .ஒரு பெண்ணும் பையனும் வழக்கம் போல டி ஷர்ட் போட்டுக்கிட்டு (பையன் அழகாய் இருந்தான்,பெண் எவ்வளோ முயன்றும் ஐ யாம் சாரி)



அப்போ ஒரு நேயர் போன் பண்ணினார்

இது(காம்பியர்): ஹலோ

அவன்(ரெகுலர் நேயர் நாய்): ஹலோ திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம்,சிவந்திபுரம் , 7 வது தெரு, 4 வது வீடு நாகேந்திரன் பேசுறேங்க

இதுக்கு அவுக சிரிக்குக்கிட்டே

இது: வாவ் அருமையான கவிதை
அடி பாவி இது கவிதையாடி..உன்னையெல்லாம்..

அவன் விடாமல்: இன்னைக்கொரு கவிதை சொல்லலாம்னு இருக்கேங்க

இது : சொல்லுங்க ஆவலா காத்திட்டு இருக்கோம்

அவன்: நட்சத்திரம் இல்லாமல் வானம் இல்லை
நம் நட்பு இல்லாமல் நானும் இல்லை நீயும் இல்லை

இது: கண்ணுல தண்ணி வந்துடுச்சுங்க ..நட்பை பத்தி அருமையா ஒரு கவிதை சொன்னீங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க

அவன்: ஏதாவது குத்து பாட்டு சொல்லுவான்

இதுக: என்ன பாட்டு கேட்டாலும் திண்டுக்கல் சாரதியோ இல்லனா காதலில் விழுந்தேனோ போடும்க

இப்படி தான் இருக்கு இப்போ எல்லா டிவி புரோகிராமும் ..ம்ம்

குழந்தையின் கனவில்

குழந்தையின் கனவில் வரும் பேய்களையும்
பூச்சாண்டிகளையும் ஓட ஓட விரட்டி விட்டு
குழந்தைக்கு சிரிப்பையும் மூட்டி விட்டு
அடுத்த குழந்தையின் கனவிற்கு விரைகிறார் கடவுள்

கடவுள் சென்றதை அறியாமல்
இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறது
குழந்தை உறக்கத்தில்

மழைக்கு எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்:

பெருமழைக் காலங்களில்
உன் வீட்டு வாசலிலமர்ந்து
நீ விடும் காகித கப்பல்களை
என் வீட்டு வாசலை கடக்கும்
போது நான் கவர்ந்து விடுவேன்

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அந்தக் கப்பல்கள் ஒரு போதும்
என் வீட்டைத் தாண்டிப்
போனதில்லை என்று

அது எனக்கும் மழைக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம்.

திருவிழா

மிளகாய் பொடி தடவின பேரிக்காய்
கீழிறங்கும் போது வயிற்றில் சங்கடம் பண்ணும் ராட்டினம்
ஆல மர இலையில் கேசரி
கரகாட்ட புகழ் சங்கீதாவின் குலுக்கல் நடனம்
முட்டு சந்துகளுக்கு போய் ஒரு கட்டிங்
கடைசியாய் போன போவுதுன்னு
ஒரு தடவை கும்பிட்டு போகும் சாமி

Tuesday, November 10, 2009

அவர்கள்

--------------------------------------------------------------------------------

சமீபத்தில் டி நகரில் நண்பனின் திருமணத்திற்கு போய் விட்டு திரும்பையில் ஏன் தினமும் டிரைனில் போகனும் இன்று ஒரு நாள் பஸ் ல் போகலமென பஸ் இல் ஏறினோம் நானும் ஒரு நண்பனும்.

கடைசிக்கு முந்தின ஸீட் அது , இரண்டு இளைஞர்கள் அவர்கள் வாங்கின உடைகளை பற்றி பேசி கொண்டிருநதர்கள்..நான் முதலில் அதை கவனிக்க வில்லை..கொஞ்ச நேரத்தில் அவர்கள் பேசுவதை கவனிகக ஆரம்பித்தேன்
ஏனெனில் அவர்களது பேச்சு அப்படி..ஒருவன் மற்றொருவனிடம் 'ஏண்டி அந்த ப்ளு கலர் டி ஷர்ட் எனக்கு எப்படி டி இருக்கும்..அம்மா ப்ளூ கலர் கண்டாலே எரிஞ்சு விழும்' என்றான்..அவர்கள் பேசுவது எனக்கு வித்தியாஸமாக படவே காதுகளை கூர்மையாக்கினேன்


இதற்கிடையில் கடைசி ஸீடடை நோக்கி வருபவர்களிடம் எல்லாம் அவன் பேச்சு கொடுக்க ஆரம்பிச்சான்..சிலர் பேசினர் சிலர் புறக்கணித்தனர்..
நான் மெதுவா திரும்பி பார்தேன் தாடி..மீசை நேர்தியான தலை சீவல் என மதுரை சம்பவம் ஹீரோ 22 வயசில் இருப்பது போல இருந்தான்
இன்னொருத்தன் மீசை எடுத்திருந்தான்..வளுவளுவென முகம் அவனிடம் பெண்மையின் அறிகுறி மதுரை ஹீரோ வை விட அதிகம் தெரிந்தது.


கடைசி சீட்டில் வந்த இரு ஐடி இளைர்களிடம் இவன் 'ஏன் சார் என்னை வீட்டுல டிராப் பண்றீங்களா ரொம்ப கஸ்டமா இருக்கு பஸ் ல போக' என்றான்
சிரித்து கொண்டே அந்த குரலில் பெண்மை வழிந்து கொண்டிருந்தது..அவர்களை அவன கண்டுகாகமல் அவன் உடன் வந்தவுனுடன் பேசி கொண்டான்..மீண்டும் இவன் ஏன் ஸார் உங்க கிடட தானே பேசுறேன் என உரக்க கேட்க அவர்கள் கடுப்பாகி உனக்கு என்ன வேணும் இப்போ என்றார்கள் அவர்களுக்கும் இவனை தெரிஞ்சு விட்டது போல உடனெ பெண்மை 'இதுகெலலம் ஜந்துகடி ஏன் தான் இப்படி இருக்காங்களோ என் ஒரு ஜோக் சொன்னான்..அசிங்கமாய்..யாரும் சிரிககாதது கண்டு இன்னும் உரத்த குரலில் இவன்களுக்கு எல்லாம் சென்ஸா ஆஃப் ஹுமர் ஏ இல்லை ஜடம் என்றான் கோவதுதுடன் தன் நண்பனி(பியி)டம்


யாரும் அவர்களை திட்ட வில்லை எனக்கு சிரிப்பு வந்தாலும் அவர்கள் மேல் பரிதாபமும் வந்தது ஏன் கடவுள் (அப்படி ஒருத்தர் இருந்தா) இப்படி ஒரு சோதனை இந்த இளைஞர்களுக்கு என யோசித்து கொண்டிருந்தேன்..இதறகுள் அவன் என்னிடமும் என் நண்பனிடமும் 'க்ரீன் ஷர்ட் ஸார் உங்களை தான் நீங்களாவது வீட்டுல கொண்டு போய் விடுறீங்ளா' என கேட்க நண்பன் கெக்கலித்து கொண்டிருந்தான்


இவர்களை போன்றவர்களை நான் நிறைய சமையங்ளில் சந்தித்து இருகிறேன்..சேலம் பதையில் பஸ் இல் இவர்களை தொந்தரவு அதிகம் இருக்கும் என நண்பன் சொல்ல கேட்டிருகிறேன்
இவர்கள் முழுவதும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறியவர்கள் அல்ல..அந்த மாற்றத்தை நோக்கி போய் கொண்டு இருப்பவர்கள்..ஆண்கள் போலவே இருப்பார்கள் ..நல்லவே பேசுவார்கள்..மெதுவாக உடலில் கை போடுவார்கள்
அப்போது தான் நமக்கு புரிய ஆரம்பிக்கும்..

கோவையில் படிக்கும் போது அந்த அதிகலையில் ஊரிலிருது கோவைக்கு சேர்ந்த உடனே காந்தி புரம் பஸ் ஸ்டாண்ட் ல் 3 டி காக வெயிட் பண்ணும் சமயங்களில் மெதுவாய் வந்து பேச்சு கொடுத்திருகிறார்கள்..சில சமயம் பஸ் பக்கத்து ஸீட்டில் அமர்ந்து கொண்டு சிரிக்க சிரிக்க பேசி
இந்த பேண்ட் எங்கே தச்சது என கைகளை உடலில் பரப்புவார்கள்..


இவர்கள் மேல் அந்த சமயத்தில் கோவம் வந்தாலும் பின் ஏன் இவங்க மட்டும் இப்படி இவர்கள் ..மனக்குழ்பபதிற்கு என்ன தான் வடிகால்..உடல் மாற்றங்ளை ஏன் இந்த சமூகம் ஏற்றுகொள்ள மறுக்கிறது..உடல் ஊனமுற்றவரகளை மாற்று திறன் படைத்தோர் என
பெருமைப்படுத்தும் நாம் இவர்களை ஏன் கேலியும் கிண்டலும் செய்கிறோம் என யோசிக்க தோணும்.

பெரும்பாலனோர்கள் அந்த ரெண்டும்கட்டாம் உடல்மாற்றதில் வீட்டை விட்டு வெளியேறுவது தான் நடக்கிறது.பெற்றோர்களும் அவர்களை அவமானமாய் கருதி வெளியேறினால் சந்தோஸம் என விட்டு விடுகின்றனர்
அவர்கள் பின் நாட்களில் எப்படியாது ஒரு கூட்டதோட சேர்ந்து வழக்கமான தொழில்களை கற்று கொண்டு வாழவும் பழகி கொள்கின்றனர்

எந்த திருநங்கையாவது மீண்டும் வீட்டுக்கு போய் நான் தான் உங்கள் மகள் வந்துருக்கிறேன் என்று பெற்றொர்களை குற்ற் உணர்ச்சியில் இது வரை ஆழ்த்தியிருப்பார்களா?

கலேஜ் நேரத்தில் கோவைபுதூரில் தங்கி இருந்த போது ஒரு மெஸ்ஸில் போய் சாப்பிடுவோம் எப்போதும்..அந்த மெஸ்ஸில் ஒரு பையன் இருந்தான் ஸர்வராக..எல்லா வேலையும் செய்து கொண்டு
காலேஜ் பசங்க துணிகளை துவைத்தும் தருவான்,வீட்டு வேலைகளும் செய்வான்..அந்த மெஸ்ஸில் தான் நாங்கள் விகடனும் மற்ற புக்ஸ் வாங்குவோம் சாப்பிட பெரும்பாலும் யூஸ் பண்ண மாட்டோம்..இங்கே புக் வாங்கினால் மெதுவாய் காசு கொடுத்தால் போதும்
இப்படி புக்குக்கு ஒரு கடை பிரியாணி க்கு ஒன்னு தம் க்கு ஒன்னு என எல்லா இடத்துலயும் அக்கொவுன்ட் வச்சிருப்போம்


மெஸ்ஸில் இருந்த அந்த பையன் என்னை பார்த்தாலே 'என்ன திருநெல்வேலிகாரரே சௌவுக்கியமா' என என் சுருள் தலைமுடியை கோதுவான் எனக்கு பயமாய் இருக்கும்..எல்லாருக்கும் ஒரு பேரு வைத்திருந்தான் ..சில இளைஞர்களிடம் நெருங்கி பேசினான்
எல்லாரும் அவனை நைட் கிரவுண்ட் பக்கம் வாடன்னு சொல்ல ..;பொங்கென்னே' னு சிரிப்பான்..


எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடய கதாவிலாஸத்தில் இதை பற்றி எழுத்திருப்பாரு..அவருடைய ஊரில் இந்த மாதிரி ஒரு பையன் வசித்தான் அவனுக்கு அப்பா அம்மா கிடையாது
அவன் தாத்தவிடம் தான் வளர்ந்தான்..வளர வளர அவனுடைய வழக்கங்கள் மாறி வந்தது பெண்களுடன் கோவிலுக்கு போதுல் ,பூ தொடுத்தல் என பெண்களுடனே இருக்க விரும்பினான்
ஒரு முறை இந்த பையனின் பக்கத்து வீட்டு அக்காவிற்கு திருமணம்..இவன் தான் பெண் போல எல்லா வேலையும் ஓடி ஆடி செய்து கொண்டிருந்தான்
அவன் தாத்தா இவனை திருதத முடியாதென விட்டு விடுவார்..திருமண நாளன்று காலையில் ஏதோ சத்தம் கேட்க என்னவென்று பார்த்தால் இந்த பையனை போட்டு எல்லாரும் அடித்து கொண்டிர்புபார்கள்..தாத்தா அவசரமா போய் ப்ரர்த்து விசாரித்தால் அந்த பையன் காலையில் மாப்பிள்ளை கிணற்று அடியில் குளித்து கொண்டிருக்கும் போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பான்

இதை கேட்டவுடன் தாத்தவும் அவனை பயங்கரமாக அடிப்பார்..ஒரு கட்டத்தில் அடி தாள முடியாமல் 'கொண்டய்யா(அவன் தாத்தா பெயர்) என்ன இப்படி அடிக்குறதுக்கு பதிலா அந்த மாபிள்ளைக்கே என்னை கட்டி வச்சிரு ' என்று சொல்லுவான் என்று முடித்திருப்பாரு எஸ் ரா..இதை படித்த உடனே அந்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு யோசிகக ஆரம்பித்து விட்டேன்


இப்போது திருநங்கைகள் டிவி நிகழ்சிசிகள் நடத்துவதும் வெப்ஸைட் ஆரம்பிப்பதும் பரதம் ஆடுவதும் வரவேற்க தக்க விஷயம்...அவர்களையும் நம்மோடு சேர்த்து கொள்வோம்



ps:

தாமபரம் நெருங்கும் போது அந்த மதுரை ஹேரோ அவன் அம்மாவிற்கு போன் செய்து நீங்க கேட்டை இ சாத்திட்டு தூங்குகும்மா என்று இன்னும் பெண் குரலில் பேசி கொண்டிருந்தான் அவனுக்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்

Thursday, October 15, 2009

கண்டு புடிங்க என்ன படம் னு & பாடலாசிரியர்கள் பெயரும்

1
காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே

2
கம்ப நாடன் உன்னை கண்டால் சீதை என்று துள்ளுவான்

3
சொர்கத்தில் இருந்து யாரோ அனுப்பும் காதல் கடிதம் இன்று தான் வந்தது

4
உதடுகள் உரசிட தா..னே...
வலிகளும் குறைந்திடும் மா..னே

5
நந்தவனக் கரையில்...நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை..யார் பறித்தார்

6
மழையும் வெயிலும் என்ன..
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன

Friday, September 04, 2009

மசாலா மிக்ஸ்- பாரதி,சாண்டில்யன்

சுவையான சம்பவங்கள் - பாரதி:
------------------------------


காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.

”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” –என்று

Poem:
----


தனித்து நடந்து செல்கிறேன்

வாழ்வின்
இருள் கனத்த வீதிகளில்
தனித்து நடந்து செல்கிறேன் .
யாரோ என் கரங்களைப் பற்றுகிறார்கள் .
பயமாக இருக்கிறது .
இப்போது தம் கரங்களை
விடுவித்துக் கொண்டார்கள்
இப்போது மிகமிக பயமாக இருக்கிறது .


Tamil:
-------

தற்குறிப்பேற்ற அணி

தமிழ் இலக்கணத்தில் "தற்குறிப்பேற்ற அணி" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது.


தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. உதாரணம்:

இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"

இதன் பொருள்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

அதே போல் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்ப்போம்.

"மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடைத் தேய்ந்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று"

பாடலின் பொருள்: மண்ணுலகைத் தாங்கும் தோள்வலிமையுடைய கிள்ளியின் மதயானை போரில் பகை அரசர்களுடைய வெண்கொற்றக்குடையைச் சிதைத்தது. அந்தச் சினத்தோடு (வெண்கொற்றக்குடை என நினைத்து) வானிலேறி நம்மீதும் பாயுமோ என குளிர்நிலவு அஞ்சித் தேய்கிறது.

சந்திரன் தேய்வது இயல்பு. பகைவரின் வெண்கொற்றக்குடையை தேய்த்தது போல் தன்னையும் தேய்க்குமோ என சந்திரன் அஞ்சித் தேய்வதாகக் கூறியது பெயர்பொருள் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறிய தற்குறிப்பேற்றம் ஆகும்.

சாண்டில்யன் எழுதிய "யவண ராணி" கதையில் ஒரு அத்தியாயம் பூராவும், அந்த ராணி குளிப்பதை விவரிக்க நிறைய தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியிருப்பார் சாண்டில்யன். சில உதாரணம் இங்கே...

"யவண ராணி ஆடை இல்லாமல் குளிப்பதை, சந்திரன் (நிலா) மறைந்திருந்து பார்ப்பான். அந்த சந்திர ஒளி ராணியின் உடல் மீது வட்ட வட்டமாக விழும்." அது இயல்பான ஒன்றுதான். ஆனால் கவிஞர், இதற்கு, "ராணியின் அழகில் மயங்கி சந்திரன் அவள் மீது பொற்காசுகளை வீசுகிறான்" என்று எழுதியிருப்பார். இது தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரு அறுமையான எடுத்துக்காட்டு.

அதேபோல் "ராணி குளித்து முடித்துவிட்டு, தன் உடலை துவட்டிய துணியை, ஒரு மரத்தின் மீது காயப்போடுவாள்." அப்பொழுது அந்தத் துணி "நான் இவ்வளவு நேரம் இந்தப் பேரழகியின் உடலின் பல இடங்களில் படர்ந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த மரத்தின் மீது என்னை காயப்போட்டுவிட்டாளே" என கண்ணீர் வடிப்பதாக எழுதியிருப்பார். ஈரமான துணியில் இருந்து நீர் சொட்டுவது இயல்பு. அதை கண்ணீர் வடிப்பதாக் தன்குறிப்பை ஏற்றி அழகாக கூறியிருப்பார் சாண்டில்யன்

ஆன்சைட்டு

என் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் என் மனைவியின் அத்தை பெண் திருமணம் வந்தது , புதிதாய் திருமணம் ஆனவர்கள் மற்றொரு திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது ஒரு வழக்கம்

என் திருமணத்திற்கு கூட என் பள்ளி நண்பி ஒருத்தி வந்திருந்தாள் ,அவளுக்கு 2 வாரம் முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது..


என் மனைவியின் அத்தை பெண் திருமணத்தில் மனைவியின் சேலையை பிடித்துக்கொண்டே அவள் பின்னே உட்கார்ந்திருந்தேன்..எல்லாரிடமும் என்னை அறிமுகபடுத்தினார்கள் நான் கூச்சத்தில் நெளிந்தேன்..ஏற்கனவே நான் shy டைப் வேறயா(!!!) அதனால் எல்லாரையும் பார்த்து சிரித்து வைத்தேன்..என் காதல் திருமணத்திற்கு வர மறுத்த பல பெரிசுகளிடம் என்னை என் மனைவி வீட்டார் அறிமுகபடுத்தி பாடாய்படுத்தினார்கள்


அப்படி ஒரு பெரிசுகிட்ட என் மாமியார் என்னை அறிமுகப்படுத்த , அது என்னய பார்த்து முதல்ல கேட்ட கேள்வி

"என்னப்பா பாரின்லாம் போலா"(அடேய் நான் இன்னும் புராஜக்ட்குள்ளேயே போகல.. பார் யுவர் இன்பார்மேசன் நான் அப்போதும் பென்சில் தான் இருந்தேன்)



"ஹி ஹி இல்லைங்க ..போவனும்" (நான்)


"என் பேரன் மெட்ராசுல அது என்ன ccs ஆ ஆங்க அதுல சேர்ந்து ஆறு மாசத்துல பாரின் போய்ட்டானே" (இது என்ன பெரிய விஷயம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஆபர் லெட்டர் கிடைச்ச உடனே பாரின் போய்ட்டாரே)


"அப்படியா சந்தோஷ்ம்" (யோவ் போய் வெத்தலய குதப்பிக்கிட்டு ஓராமா உட்காரும்வோய்)

"சீக்கிரனும் போயிரனும் சரியா" (நானும் அதே தான் சொல்றேன் நீங்களும் சீக்கிரமா போயிரனும்)


ஒரு வழியா எஸ்கேப் ஆகி போனா, மாமியார் என்னை மனைவ்யின் அத்தை பையனிடம் அறிமுக(படுத்தினார்) ..அவனோ ஆன்சைட்டில் தான் காலம் தள்ளுகிறான் போல

"ஹாய் சாரி யார் ஐ வோஸ் நாட் ஏபில் டு கம் டு யுவர் மேரேஜ்" (ஆஹா இங்கிலிசுல பீட்டர் உடுறானே என்ன பண்றது ..மாமியார் முன்னாடி இவன்கிட்ட டமில்ல பேசினா மருவாதை இல்லையேன்னு வாய்க்குள்ள ரிகர்சல் பார்த்து..)

"ஹே தாட்ஸ் ஓகே" (அப்பாடி பேசியாச்சு..இங்கிலிசு பேசியாச்சு)



இந்த சமயத்தில் என் மாமியாரை யாரோ கூப்பிட , ஆத்தாடி எஸ்கேப் இனிமே பாருடா மவனே ன்னு அவன் அடுத்த வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி நானே


"எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க" (மருவாதையா டமில்ல பதில் சொல்லு இல்லனா சங்க(கழுத்த) நெரிச்சிருவேன்)..


"ஆக்சுவலா" அப்படின்னு ஆரம்பிச்சு மறுபடி இங்கிலிசு (டேய் உண்மையிலேயே உனக்கு தமிழ் தெரியாதா)


அடுத்து நான் என்ன டொமைன், பிளாட்பார்ம் எல்லாம் கேட்டான்..நான் பெஞ்சில் இருப்பதை சொல்லாமல அப்போதைக்கு டிரயினிங் போயிக்கிட்டு இருந்த
AS 400 ஐ சொல்லித் தொலைச்சேன்

'ஹோ இசிட் லைக் மெயின்பிரேம்' (நல்ல வேளை இவனுக்கு as 400 தெரியல)


'யா இட்ஸ் ஆக்சுவலி அ மினி கம்ப்யூட்டர்' (அப்படித்தான் ppt ல போட்டிருந்தது!!!)


அவனிடம் தப்பு தப்பாய் கொஞ்ச நேரம் பேசி எஸ்கேப் ஆகி மூச்சு வாங்கி வீட்டுக்கு வந்த உடனே என் மனைவிட்ட ரொம்பா கோவமாய் 'இனிமே எந்த கல்யாணத்துக்கும் என்னை கூப்பிடாத" ன்னு request பண்ணினேன்

பொதுவாக ஆன்சைட்டு பத்தி எனக்கு நெகட்டிவ் பீலீங்க்ஸ் தான் இருக்கு..அங்க போய் சோத்துக்கு அலையனும்,ரொம்ப கஸ்ட படனும்...ஆனா சில டைம் நம்ம கூடயே பென்சுல உட்கார்ந்திருந்து திடுதிடுப்புன்னு ஒரு நாள் ஆன்சைட்டு போயி அங்க பாதாள சாக்கடை வாசல்ல பேண்டுக்குள்ளாற ரெண்டு கையும் உட்டு போட்டோ எடுத்து பிகாசாசிலோ,ஆர்குட்டிலோ அப்டேட் பண்ணிட்டு மெயில் அனுப்புவானுக பாருங்க அதை பார்க்கும் போது ஒயின்ஷாப்புல போய் டூப்ளிகேட் சரக்கே அடிக்கலாம் போல் தோனும்...

ஆன்சைட்டு போயிட்டு எல்லாரும் அவங்க அனுபவம் எழுதும் போது எனக்கு ஆசையாயிருக்கும் நாமளும் ஒரு நாள் இப்படி எழுதுவோம்டா என..ஆனா குடும்பத்த இங்க விட்டுட்டு பணத்தை துரத்தில் ஹெல்த் ஸ்பாயில் பண்றோம்ன்னு நினைச்சா கஸ்டமா இருக்கு..

உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க

Wednesday, September 02, 2009

சமீபத்திய எரிச்சல்:

ரீமிக்ஸ் பாடல் னு ஒரு கலாச்சாரம் ஃப்ளூவை விட வேகமா பரவுது. லேட்டெஸ்ட்டா அப்படி ஒண்ணு வந்துருக்கு.. அலைகள் ஓய்வதில்லை பாடலான ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. அதை வைகைனு ஒரு படத்துக்கு அப்படியே போட்டிருக்காங்க.. ரீமிக்ஸ்னு வெற சொல்றாங்க.. கொடுமை டா சாமியோவ்.. அந்த ஹீரோவும் ஹீரோயினும் மானாட மயிலாட கோஷ்டி போல.. என் பொண்டாட்டி உய்யினு விஸிலடிக்குது ..

இன்னொரு ரீமிக்ஸ் நம்ம சார்மிங்க் ஹீரோ ஸ்ரீகாந்த் படத்துல வந்துருக்கு யாராது கேட்டீங்களா .. பாவம் சிவாஜியும் எம்.எஸ் ஸும்

இதை துவக்கி வச்சது ஏஆர் ரஹ்மான்னு தான் நினைக்கிறேன்.. ஆனா இது வரைக்கும் ஏஆர் போட்ட ரெண்டு ரீமிக்ஸும் அசத்தலானது.. நல்லாவும் இருந்தது. இப்போ வர பாடல்கள் சத்தம் ஓவராவும் மொட்டைகள் கேமராவை பார்த்து கை நீட்டுவதும் தான் அதிகமா இருக்கு

தொட்டால் பூ மலரும் ஸாங்க் தான் முதல் ரீமிக்ஸ் தமிழ்லனு நினைக்கிறேன் அதுக்கு முன்னாடி ஊரை தெரிஞ்சுகுட்டேன் கண்மணிய கண்ணம்மானு விசு சம்சாரம் அது மின்சாரம்ல உல்ட்டா பண்ணிருப்பாரு.

கவிதை குண்டர்ல வர தனியேன்னு ஒரு ஸாங்க் யாராவது பாத்திருக்கீங்களா.. அது தான் இப்போ அடிக்கடி முனுமுனுகிறது நானு.

சில கேள்விகள் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்

இந்த டபுள் ஆக்டு ஐடியா வை கண்டு புடிச்சவங்க நம்ம ஆட்களா ,ஆங்கில படங்களில் இந்த டபுள் ஆக்ட் சமாச்சாரங்கள் உண்டா அதுவும் அப்பாவும் மகனும் ஒரே மாதிரி இருக்குறது போல கதைகள் உண்டா?

Tuesday, September 01, 2009

இளையராஜாவின் பெஸ்ட்

http://www.youtube.com/watch?v=--d1kOfr-fc

போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா

போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா அதுவும் உங்கள் பிறந்த நாள் அன்று ....ஹி ஹி நான் மாட்டியிருக்கிறேன்(கிரேட் டா gkp நீ..)..சரி கைத்தட்டுனது போதும் நிப்பாட்டுங்க!!..



கிபி 2000 (கொசுவர்த்தி எல்லாம் இல்லைங்க இது குட்நைட் தான்!!)நிறைய இளைஞர்கள் தமிழகத்தில் SI ஆக நியமிக்கப்பட்டார்கள்..அதுவும் திருநெல்வேலியில் பெரும்பாலோன ஊர்களில் எல்லாம் இளைஞர்கள் புத்தும் புது இளைஞர்கள்..ஆக்ரோஷமான,விரைந்து செயல்படும் இளைஞர்கள்



எங்கள் ஊருக்கு வந்த அந்த SI வந்த முதல் நாளிலிருந்து தன் வேலையை ஆரம்பித்திருந்தார்..எங்கள் ஊர் கிரமாமாததால் சில பெரிய மனுஷன்கள் ரவுடியிசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்..சினிமா அளவு டாடா சுமா,கையெறிகுண்டு இல்லையென்றாலும்.. ஓரளவிற்கு தொல்லைப்பண்ணிகொண்டிருந்தார்கள்..அப்படிப்பட்ட ஒரு பெரிய மனுஷனை இவர் விரட்டி விரட்டி பாடாய்படுத்த அவர் தலைமறைவானார்..ஊர்காவல் படை என்று ஒன்றை நிறுவி ஊரில் வெட்டியாக சுத்தி கொண்டிருந்த பசங்களுக்கு லத்தி கொடுத்து தேராட்டத்திலும் அம்மன் கோவில் கொடையிலும் இரவு ரோந்துக்கும் பயன்படுத்தினார்...





அவருக்கு 'படையப்பா' என எங்கள் ஊர் மக்கள் பேர் வைத்திருந்தார்கள்..என்ன காரணமென்று தெரியல்..அவரது புல்லட்டின் பின் எப்போது பச்சை மட்டை வைத்திருப்பார்..பெரியவனா சிறியவனா என பார்க்காமல் எல்லாரையும் சவட்டினார்...ஊர் அமைதியாக இருந்தது...'பச்சை மட்டை படையப்பா' எனவும் அவரை அழைத்தார்கள்...



ரோட்டோர கடைகளில் உட்கார்ந்து வெட்டி அரைட்டை அடித்துக்கொண்டிருந்த நாங்கள் இவரது புல்லட்டின் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தோம்..அப்போது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..பிறந்த நாள் அதுவுமா அம்மா அப்பா காலில் விழுந்து ,அப்பா கொடுத்த அம்பது ரூபாய் புது டிரஸ்ஸடன் பிசிக்ஸ் டியூசன் போனேன்...



எல்லாமே நல்லாதாய் தான் நடந்த கொண்டிருந்தது..என் வீட்டிலிருந்த HERO PUCH ல் தான் எல்லா இடத்துக்கும் போவேன்..அந்த வண்டியை விற்க வேண்டும் HERO HONDA வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் எருமைமாடு பசங்களை ஏற்றிகொண்டு காட்டுத்தனமாய் ராம நதி டேம் ரோட்டில்..இல்ல இல்ல கல் ரோட்டில் ஓட்டுவேன்..அப்படியும் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தது

சம்பவம் நடந்த அன்று(என்னா பில்ட் அப்பு)எனக்கு பிறந்த நாள் டிசம்பர் 8 , காலையில் அம்மா,அப்பா காலில் விழுந்து, அக்கா வாங்கி வைத்திருந்த டி சர்ட்டை போட்டுக்கிட்டு ஹீரோ புக்கை கிளப்பி பிசிக்ஸ் டியூசன் போனேன்(பிசிக்ஸ் எனக்கு பிடித்த சப்ஜெக்ட் அதில் நான் செண்டம் வாங்கினேன் என்பதெல்லாம் அவுட் ஸ்கோப் ஆப் திஸ் போஸ்ட்!!)

டியூசன் பக்கம் தான் பஸ் ஸ்டாண்டு அதன் எதிரே போலீஸ் ஸ்டேசன்...பிறந்த நாள் உற்சாகத்தில் நடந்து போனவங்களை 'மாப்பி வாடா பஸ்ஸ்டாண்டுல இறக்கி விடுறேன்' வாண்டடா சனியனை சங்கு ஊதி கூப்பிட்டேன...மூன்று பேரும் என் வண்டியில் பஸ் ஸ்டாண்டு போய் இறங்கி அவங்களை இறக்கி விட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினேன்..


அலைபாயுதே வந்திருந்த நேரம் ..என்றென்று புன்னகை பாட பல்சரோ,ஹோண்டாவோ வேணும் ஹீரோ புக்கில் வானுயர்ந்த சோலையிலே தான் பாடிட்டு போக முடியும்..ஏதோ பாடிட்டு போயிக்கினே இருந்தேன்..என் வீட்டு பக்கத்துல போய்ட்டேன்..திடீர்ன்னு என்னை முந்த ஒரு வண்டி போச்சு அதில் பின்னாடி நான் இறக்கி விட்ட மாப்பு உட்கார்ந்திருந்தான்..'என்னடா மாப்பி' ன்னு கேட்டு அப்புறமா தான் பார்த்தேன் முன்னாடி ஆப்பு உட்கார்ந்திருந்தை..

SI:'டேய் வண்டிய நிறுத்துடா..கூப்பிட்டா நிக்க மாட்டியோ'(போலீஸ்கார் போலீஸ்கார் நீங்க் என்னை எப்போ கூப்பிட்டீங்க!!!)

நான்: @##(#)@#)

SI: டிரிபிள்ஸ் ஏத்திட்டு நீ ஸ்டேசன் முன்னாடி போவ அவ்ளோ பெரிய ஆளா நீ

நான்: அப்படி எல்லாம் இல்ல சார்...பில்டிங் பேஸ்மெண்ட் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தது..

SI:வாடா வண்டிய எடுத்துக்கிடு என மாப்பை இறங்கி என் வண்டியில் ஏறச் சொல்லிட்டு ஸ்டேசனுக்கு போனார்..

நான் வண்டியை எப்படி ஓட்டினேன் என தெரியல..அவர் பின்னாடியே போனேன்..ஊரே வேடிக்கை பார்த்தது...ஏண்டா மாப்பு எதுக்குடா என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அறிவே கிடையாதா??

இல்லடா அவர் பஸ் ஏற போற நேரத்துல கையும் களவுமா பிடிச்சி உன் வீடு எங்கேன்னு கேட்டு கூட்டிட்டு வந்துட்டாருடா...அவர் மிரட்டுனதா உச்சா போகாகது தான் குறை!!

எனக்கும் கண்ணீர் கண்ணில் 'ரெடி ஸ்டார்ட்' சொன்னால் கொட்டி விடும் அளவு நிறைந்திருந்தது..

ஸ்டேசன் போய் என்கிட்ட லைசன்ஸ்,ஆர் சி எதுவும் இல்லாததை தெரிந்து இன்னும் அவர் பி பி உயர..அதுக்குள் எங்க நைனாவுக்கு நியூஸ் கிடைத்து கம்பெனியில் இருந்து ஊரில் செல்வாக்குள்ள சிறு தலைவர்களுடன் 'பாட்ச்சா பாட்ச்சா' பேக்ரவுண்டில் வர .எனக்கு இப்போ SI மேல இருந்த பயம் போய் அப்பா என்ன சொல்ல போறாரோன்னு சேக் ஆக ஆரம்பித்தது..

அப்பா பீடி கம்பெனி மானேஜர் ஆதாலால் ஊரில் நல்ல மதிப்பிருந்தது எங்க ஊரு பக்கம் பீடித்தொழில் தான் முதன்மை தொழில்..அப்பாவுடன் வந்திருந்த பெரியவர்கள் எஸ் ஐயுடன் பேசினார்கள்..அவரோ டென்சனாவே பதில் சொன்னாரு

நோ பார்க்கிங்க்,வித் அவுட் லைசன்ஸ், ஆர்சி புக், டிரிபிள் போனதுன்னு 4 கேஸ் போடுவேன் , 1500 பைன் கட்டனும் என்றெல்லாம் மிரட்டினார்..என் அண்ணன் பெயரில் தான் ஆர்சி புக்,லைசென்ஸ் எலாமிருந்து ஆகவே கேஸ் பைல பண்ணினால் பிரச்சினையாகும், அவனுக்கு அப்போது தான் பாஸ்போர்ட் வேறு வந்திருந்தது..

என்ன பண்லாமென யோசித்துக்கொண்டிருந்த போது பார்த்தேன் என் டியூசன் பெண்கள் எலாம் ஸ்டேசன் பக்கத்திலிருந்து என் வகுப்பு பெண்ணொருத்தி வீட்டிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு பப்பி ஷேமாகி போச்சு.....இதற்குள் எஸ் ஐக்கு ஏதோ போன் வர 100 ரூ பைன் கட்டிட்டு போங்க அந்த பார்ம்ல கையெழுத்து போட்டுட்டு போங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்

ரைட்டரும் 50 ரூபாய் போதும் சார், ஹி ஹி டீ குடிக்க எனவும் காலையில் காலில் விழுந்து வாங்கிய 50 ரூபாயை எடுத்து நீட்டி நல்ல பேர் வாங்கிக்கொள்ளலாம் என பார்த்தால் அப்பா என பார்த்து முறைத்துக்கொண்டே வெளியேறி விட்டார் இதற்குள் அண்ணன் வந்து விட அவனுடன் வீட்டுக்கு போனேன் என்னை அண்ணாவும் அக்காவும் சாமி ரூமிலியே வைத்து அடைகாத்தார்கள் அப்பா கோவம் தீரும் வரை..


அதற்கு பின் அந்த எஸ் ஐ பார்த்தாலே வயிற்றுக்குள் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும் நாளாக நாளாக அவர் மீது நிறைய புகார்கள் வரத்துவங்கின, பொண்டாட்டிய ரோட்டில் போட்டு ஒரு நாள் அடித்தார் எனவும் , நிறைய பெருந்தலைகளிடம் பணம் வாங்கினார் என்றும்..ஒரு நாள் அவரை சிலர் மறைவாக இருந்து கல்லெறிந்து தாக்கியதில் காயமாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தார் எனவும் கேள்விப்பட்டேன்

கல்லூரி முதல் வருட விடுமுறையில் ஊருக்கு போயிருந்த போது ஒரு நாள் என் வீட்டு வாசலில் அப்பாவுடன் ஏதோ கம்பெனி கேஸ் விஷமாக பேசிக்கொண்டிருந்தார் , அப்போது அவரிடன் எந்த கடுமையும் இல்லை , அப்பா இது என் கடைசி பையன் என அறிமுகப்படுத்த 'நல்லா படிக்கிறியா' என கேட்ட படி எங்கள் வீட்டு மாதுளை செடியிலிருந்து பழம் ஒன்றை பறித்து சாப்பிட்டுக்கொண்டே சென்று விட்டார்...அப்போது ஏனோ தெரியலை எனக்கு பயமாவேயில்லை...