உன் கைக்குட்டை உடைந்த வளையல்
உதிர்ந்த தலைமுடி சேகரித்து
வைத்துக்கொள்ளவில்லை நான்
கடற்கரையில் நம்மிருவருக்குமிடையில் காற்று புகாமல்
முத்தமிட்டுக் கொண்டதில்லை
ஆயுசு முழுதும் இலவசம் என அலறும்
அலைபேசியில் அரற்றியதில்லை
தியேட்டரில் பபுல்கம்மை இதழ்மாற்றியதில்லை
பேருந்தில் மூக்குரச அமர்ந்து சூடேற்றியதில்லை
இரு சக்கர வாகனத்தில் இறுக்க கட்டியனைத்து
காற்றை கிழித்து பறந்ததில்லை நாம்
ஆனாலும் நாமும் காதலித்துக்கொண்டு தானிருக்கிறோம்
பின்குறிப்பு:
காதல் என்ற பெயரில் காமெடி பண்ணிக்கொண்டிருக்கும் காதலர்களை அன்றாடும் தாம்பரம் பாலாஜி ஓட்டலில் மதிய சாப்பாட்டின் போதும்..சானடோரியம் மின்சார ரயில் நிலைத்தில் ஞாயிறு வெயிலிலும்..ஸ்பென்சர்..மாயாஜாலில்..ஐநாக்ஸில் பொழுதன்றும் ...எல்லா கடற்கரை..பூங்காக்களில் குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுழிக்க வைக்கும் படி சிலர் நாய்க்காதல் பண்ணுபவர்களை பார்த்து பல முறை பொருமியிருக்கிறேன்...அதன் வெளிப்பாடு தான் இது..இது கவிதை என்று நினைத்துக்கொள்வது அவரவர் விருப்பத்தை பொருத்தது
Tuesday, July 07, 2009
சமீபத்தில்
சமீபத்தில் கேட்ட பாடல்:
பசங்க
ஒரு வெட்கம் வருதே வருதே..அழகான பாடல்..இயல்பான காட்சியமைப்பு..படத்தை பற்றி நல்ல விமர்சங்கள் இது வரை..எப்படியாது பார்த்துப்புடனும் பா
குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்
ஒரு ஊரில் ஒரு தோப்பு..பாடல் அடிக்கடி முணுமுணுப்பது...பாடியது யுவனோ எனவோ நல்லா பாடியிருந்தாப்புல..ஹீரோயினும் ஹீரோவும் பார்க்கும் போது காமெடியா இருந்தாலும் யதார்த்தத்தில் அது தான் நிஜம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்...
சமீபத்தில் சென்ற இடம்:
பாண்டிச்சேரி
காலேஜ் நண்பர்கள் திடீரென்று வந்து என்னை அள்ளிக்கொண்டு பாண்டிச்சேரி கூட்டிச்சென்றார்கள்..பாசக்கார பயக என்று நினைத்தால் ECR ரோட்டில் என் காசில் கார் டேங் நிரப்பிக்கொண்டார்கள்..வந்த செக்போஸ்ட்க்கெல்லாம் 17 ரூ தெண்டமழுது எதிர்ப்பட்ட அழகு பதுமைகளை எல்லாம் கடந்து பாண்டிச்சேரியை அடையும் போது மாலை 4.31.52... அங்கே போனப்பின் தான் நண்பர்களுக்கு போன் போட்டு இங்க என்னப்பா இருக்குது பார்க்க என்றோம்
ஆரோவில் னு ஒன்னு இருக்குது மச்சி அங்கே பாரினர்ஸ் கு தனியா நமக்கு தனியா வழி இருக்கும் பாரினர்ஸ் ரூட்ல போ குஜாலா இருக்கும் எனச் சொல்ல மெதுவாய் உள்நுழைய டிரை பண்ணிய எங்களை லத்தியை காட்டி அப்படிக்கா போவச் சொல்ல தெரிந்த ஓட்டைகளில் எல்லாம் உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே சென்றோம்..ஆரோவில்லில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒண்ணுமில்ல 4 போட் ஒரு பாட்டிக்கடை..ஓரமாய் உட்கார்ந்திருக்கும் ஒரு மேட் பார் ஈச் அதர் ஜோடி காவல் காக்கும் 3 தொப்பை போலீஸ்..மொட்டை தலை பாரினர் அவனுடன் 4 யங் சன்பாத் எடுத்து கொண்டிருந்த வெள்ளைத்தோல் அழகிகள் அவர்களை சிசர்ஸ் சிகரெட் அடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 32 1/2 இளசுகள்..
நாங்க கிங்க்ஸுடன் போய் கெத்தா அந்த 4 பெண்களை பார்த்தோம்..போலீஸ் எந்தரித்து வர இதான் சாக்கென்று ஆரோவில் வழியாய் நுழைய பார்த்தோம்..எங்களை தடுத்து மப்டி போலீஸ் 'எந்தூரு' என கடலூரு என்றோம் நாங்கள்..மேலும் கீழும் பார்த்து விட்டு அங்கிட்டு ஒரு வழி இருக்கு அப்படிக்கா போன்னு அசிங்க படுத்த டென்சன் ஆன நாங்க அட போங்கடா நாங்க நைட்டு F டிவில பாத்துக்கிரோம் னு டென்சனாய் பாண்டிச்சேரி பீன் போனோம்
அங்கே கருங்கல்லில் கங்காலிகள் காதலித்துக்கொண்டிருக்க டென்சாகி நல்ல பார் விசாரித்து தெரியாத்தனமாய் ஒரிஜினல் சரக்கு அடித்து தொலைத்து Monday லீவ் போட வேண்டியதாகி போச்சு
சமீபத்தில் பார்த்த படம்:
ரொம்ப நாளாய் என் லேப்பியில் ஸ்லீப்பாகிக்கொண்டிருந்த 'My little bride' என்கிற படத்தை தூசித் தட்டி போட்டேன்..
கொரியன் காமெடி பிளஸ் ரொமான்ஸ் படம் இது..நல்லா தான்யா இருந்தது ..ஹீரோயின் அவ்வளவு அழகு..அவ்ளோ குட்டி..
தாத்தா தான் செத்து போறதுக்குள்ளாற தன் நண்பருக்கு செய்த சத்தியத்துக்காக தன் பேத்திக்கும் தன் நண்பரின் பேரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்..சின்ன வயதிலிருந்தே சண்டைகோழிகளாக வளர்ந்த இவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை விருப்பமும் இல்லை..
ஆனால் ஹீரோ வந்த வரைக்கும் சரி என குட்டி ஹீரோயினை ஹனிமூன் தள்ளிட்டு போக அந்த பொண்ணு எஸ் ஆகி காலேஜ் பையன் ஒருத்தனை டாவடித்து அவன் கூட சுத்த..இந்த ஜோடிகள் வீட்டில் தம்பதிகள் போல நடிக்க..இப்படியே கதை நகருது
முடிவு சுபம் தான் ஆனா எனக்கு என்ன கோவம் னா அந்த சாவக்கிடந்த தாத்தா கடைசி வரை சாவாதது தான்
எனக்கும் இப்படி ஒரு தாத்தா இல்லாமா போய்ட்டாரே
பசங்க
ஒரு வெட்கம் வருதே வருதே..அழகான பாடல்..இயல்பான காட்சியமைப்பு..படத்தை பற்றி நல்ல விமர்சங்கள் இது வரை..எப்படியாது பார்த்துப்புடனும் பா
குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்
ஒரு ஊரில் ஒரு தோப்பு..பாடல் அடிக்கடி முணுமுணுப்பது...பாடியது யுவனோ எனவோ நல்லா பாடியிருந்தாப்புல..ஹீரோயினும் ஹீரோவும் பார்க்கும் போது காமெடியா இருந்தாலும் யதார்த்தத்தில் அது தான் நிஜம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்...
சமீபத்தில் சென்ற இடம்:
பாண்டிச்சேரி
காலேஜ் நண்பர்கள் திடீரென்று வந்து என்னை அள்ளிக்கொண்டு பாண்டிச்சேரி கூட்டிச்சென்றார்கள்..பாசக்கார பயக என்று நினைத்தால் ECR ரோட்டில் என் காசில் கார் டேங் நிரப்பிக்கொண்டார்கள்..வந்த செக்போஸ்ட்க்கெல்லாம் 17 ரூ தெண்டமழுது எதிர்ப்பட்ட அழகு பதுமைகளை எல்லாம் கடந்து பாண்டிச்சேரியை அடையும் போது மாலை 4.31.52... அங்கே போனப்பின் தான் நண்பர்களுக்கு போன் போட்டு இங்க என்னப்பா இருக்குது பார்க்க என்றோம்
ஆரோவில் னு ஒன்னு இருக்குது மச்சி அங்கே பாரினர்ஸ் கு தனியா நமக்கு தனியா வழி இருக்கும் பாரினர்ஸ் ரூட்ல போ குஜாலா இருக்கும் எனச் சொல்ல மெதுவாய் உள்நுழைய டிரை பண்ணிய எங்களை லத்தியை காட்டி அப்படிக்கா போவச் சொல்ல தெரிந்த ஓட்டைகளில் எல்லாம் உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே சென்றோம்..ஆரோவில்லில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒண்ணுமில்ல 4 போட் ஒரு பாட்டிக்கடை..ஓரமாய் உட்கார்ந்திருக்கும் ஒரு மேட் பார் ஈச் அதர் ஜோடி காவல் காக்கும் 3 தொப்பை போலீஸ்..மொட்டை தலை பாரினர் அவனுடன் 4 யங் சன்பாத் எடுத்து கொண்டிருந்த வெள்ளைத்தோல் அழகிகள் அவர்களை சிசர்ஸ் சிகரெட் அடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 32 1/2 இளசுகள்..
நாங்க கிங்க்ஸுடன் போய் கெத்தா அந்த 4 பெண்களை பார்த்தோம்..போலீஸ் எந்தரித்து வர இதான் சாக்கென்று ஆரோவில் வழியாய் நுழைய பார்த்தோம்..எங்களை தடுத்து மப்டி போலீஸ் 'எந்தூரு' என கடலூரு என்றோம் நாங்கள்..மேலும் கீழும் பார்த்து விட்டு அங்கிட்டு ஒரு வழி இருக்கு அப்படிக்கா போன்னு அசிங்க படுத்த டென்சன் ஆன நாங்க அட போங்கடா நாங்க நைட்டு F டிவில பாத்துக்கிரோம் னு டென்சனாய் பாண்டிச்சேரி பீன் போனோம்
அங்கே கருங்கல்லில் கங்காலிகள் காதலித்துக்கொண்டிருக்க டென்சாகி நல்ல பார் விசாரித்து தெரியாத்தனமாய் ஒரிஜினல் சரக்கு அடித்து தொலைத்து Monday லீவ் போட வேண்டியதாகி போச்சு
சமீபத்தில் பார்த்த படம்:
ரொம்ப நாளாய் என் லேப்பியில் ஸ்லீப்பாகிக்கொண்டிருந்த 'My little bride' என்கிற படத்தை தூசித் தட்டி போட்டேன்..
கொரியன் காமெடி பிளஸ் ரொமான்ஸ் படம் இது..நல்லா தான்யா இருந்தது ..ஹீரோயின் அவ்வளவு அழகு..அவ்ளோ குட்டி..
தாத்தா தான் செத்து போறதுக்குள்ளாற தன் நண்பருக்கு செய்த சத்தியத்துக்காக தன் பேத்திக்கும் தன் நண்பரின் பேரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்..சின்ன வயதிலிருந்தே சண்டைகோழிகளாக வளர்ந்த இவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை விருப்பமும் இல்லை..
ஆனால் ஹீரோ வந்த வரைக்கும் சரி என குட்டி ஹீரோயினை ஹனிமூன் தள்ளிட்டு போக அந்த பொண்ணு எஸ் ஆகி காலேஜ் பையன் ஒருத்தனை டாவடித்து அவன் கூட சுத்த..இந்த ஜோடிகள் வீட்டில் தம்பதிகள் போல நடிக்க..இப்படியே கதை நகருது
முடிவு சுபம் தான் ஆனா எனக்கு என்ன கோவம் னா அந்த சாவக்கிடந்த தாத்தா கடைசி வரை சாவாதது தான்
எனக்கும் இப்படி ஒரு தாத்தா இல்லாமா போய்ட்டாரே
Friday, January 30, 2009
Cine Quizzzzzzzzz
சின்ன வயசுல பக்கத்து வீட்டு பசங்களோடு, சரத்குமார் ட்ரிபிள் ஆக்ட் பண்ணிய படம் பேரு என்ன? , ரஜினி வில்லனா நடிச்ச படம் என்னனனு நாங்க எங்க சினிமா அறிவை பெருக்கிக் கொள்ள போட்டி வைத்து விளையாடுவோம் , சில சமயம் ஆசிரியர் இல்லாத போரடிக்கும் வகுப்பில், சில சமயம் ஆசிரியர் இருந்தும் போரடிக்கும் வகுப்பிலும் விளையாடுவோம்..
அப்படி நான் பெருக்கி கொண்ட சினிமா அறிவை உங்க கிட்ட காட்ட வேண்டாமா? :) அதனால தான் இந்த சினி குவிஸ்ஸ்..தெரிஞ்சா சொல்லுங்க, கூகிள் பண்ணிக் கூட சொல்லலாம்..டிரை பண்ணுங்க
1. டி.எம்.சவுந்தர் ராஜன் தமிழ் சினிமாவில் பாடிய கடைசி பாடல் எது?
குறிப்பு: ஒரு புத்தகத்தில் இதை படித்தேன், இப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார், வேண்டுமென்றால் ராஜ் டிவியில் அவரை பார்க்கலாம்
2. புதிய முகம் படத்தில் வரும் 'கண்ணுக்கு மையழகு பெண் குரல் பாடியவர் யார் ??
குறிப்பு:இவங்க கூட ஓல்ட் பாடகி
3. டவுசர் ராமராஜனின் படத்தில் வரும் பேமஸ் 'செண்பகமே செண்பகமே 'பாடலை பாடிய பாடகி யார்..
குறிப்பு: தமிழ் தெரியாது என்றாலும் பிழை இல்லாமல் பாடியிருப்பார்.
4. வரிசை படுத்துக
a)பாண்டியராஜன்
b)விக்ரமன்
c)பாரதிராஜா
d)பார்திபன்
குறிப்பு: யார் யாருக்கு கீழ அசிஸ்டெண்டா இருந்தாங்கன்னு வரிசை படுத்துங்க
5. எம்.எச்.வியும், இளையாராஜாவும் சேர்ந்து இசை அமைத்த படம் எது?
குறிப்பு: இளையராஜா 1980 ஸ்ஸ் ல பயங்கர பிஸி, ஒரே நேரத்துல பல படங்களுக்கு இசையமைத்தார், அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க நேரம் இல்லாம, எம்.ஸ்வி கு சேர்ந்து இசையமைத்தார்.
அப்படி நான் பெருக்கி கொண்ட சினிமா அறிவை உங்க கிட்ட காட்ட வேண்டாமா? :) அதனால தான் இந்த சினி குவிஸ்ஸ்..தெரிஞ்சா சொல்லுங்க, கூகிள் பண்ணிக் கூட சொல்லலாம்..டிரை பண்ணுங்க
1. டி.எம்.சவுந்தர் ராஜன் தமிழ் சினிமாவில் பாடிய கடைசி பாடல் எது?
குறிப்பு: ஒரு புத்தகத்தில் இதை படித்தேன், இப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார், வேண்டுமென்றால் ராஜ் டிவியில் அவரை பார்க்கலாம்
2. புதிய முகம் படத்தில் வரும் 'கண்ணுக்கு மையழகு பெண் குரல் பாடியவர் யார் ??
குறிப்பு:இவங்க கூட ஓல்ட் பாடகி
3. டவுசர் ராமராஜனின் படத்தில் வரும் பேமஸ் 'செண்பகமே செண்பகமே 'பாடலை பாடிய பாடகி யார்..
குறிப்பு: தமிழ் தெரியாது என்றாலும் பிழை இல்லாமல் பாடியிருப்பார்.
4. வரிசை படுத்துக
a)பாண்டியராஜன்
b)விக்ரமன்
c)பாரதிராஜா
d)பார்திபன்
குறிப்பு: யார் யாருக்கு கீழ அசிஸ்டெண்டா இருந்தாங்கன்னு வரிசை படுத்துங்க
5. எம்.எச்.வியும், இளையாராஜாவும் சேர்ந்து இசை அமைத்த படம் எது?
குறிப்பு: இளையராஜா 1980 ஸ்ஸ் ல பயங்கர பிஸி, ஒரே நேரத்துல பல படங்களுக்கு இசையமைத்தார், அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க நேரம் இல்லாம, எம்.ஸ்வி கு சேர்ந்து இசையமைத்தார்.
தாமரையும் தமிழும்
தாமரை அழகான கவிஞர் , வைரமுத்துவின் கம்பீரம் மாதிரி, வாலியின் ஆளுமை மாதிரி தாமரையும் தமிழும்.
கோவையில் கல்லூரி அளவில் நடந்த கவிதை போட்டியில் இவர் கவிதை முதல் பரிசு பெற, பரிசை கொடுத்தவர் நம்ம தலை சுஜாதா.
நிறைய கவிதைகள் எழுதுங்க , இலக்கியத்தில் சிறந்த விளங்க இவர் வாழ்த்த , பதிலுக்கு அம்மிணி 'எனக்கு சினிமாக்கு பாட்டெழுதனும்,பெரிய ஆளா வரணும் னு 'பதில் சொன்னாங்களாம்'(கற்றதும் பெற்றதும்).
கவுதம் படங்கள் தவிர அவருக்கு மற்ற டைரக்டர்கள் வாய்ப்பு தர வில்லை(இப்போ தான் பேரரசுவே எல்லா பாட்டையும் எழுதுறாறே!!
உங்க அப்பா பேரு ரங்கமணி
அம்மா பேரு தங்கமணி
ரெண்டு பேரும் சேர்ந்து புட்டா கோவில் மணிடோய்'
என்ன லிரிக்ஸ்....
)
தனக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் மற்ற பாடல்களும் வருமென நிரூபித்த பாடல் 'கற்க கற்க (VV)'. எளிமையான வரிகள், புதுபுது வார்த்தைகள், விரசமில்லா பாடல்கள் இது தான் தாமரையின் பலம்.
இதோ அவரது லிரிக்ஸில் ஒரு பாடல்.
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா...........)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
கோவையில் கல்லூரி அளவில் நடந்த கவிதை போட்டியில் இவர் கவிதை முதல் பரிசு பெற, பரிசை கொடுத்தவர் நம்ம தலை சுஜாதா.
நிறைய கவிதைகள் எழுதுங்க , இலக்கியத்தில் சிறந்த விளங்க இவர் வாழ்த்த , பதிலுக்கு அம்மிணி 'எனக்கு சினிமாக்கு பாட்டெழுதனும்,பெரிய ஆளா வரணும் னு 'பதில் சொன்னாங்களாம்'(கற்றதும் பெற்றதும்).
கவுதம் படங்கள் தவிர அவருக்கு மற்ற டைரக்டர்கள் வாய்ப்பு தர வில்லை(இப்போ தான் பேரரசுவே எல்லா பாட்டையும் எழுதுறாறே!!
உங்க அப்பா பேரு ரங்கமணி
அம்மா பேரு தங்கமணி
ரெண்டு பேரும் சேர்ந்து புட்டா கோவில் மணிடோய்'
என்ன லிரிக்ஸ்....
)
தனக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் மற்ற பாடல்களும் வருமென நிரூபித்த பாடல் 'கற்க கற்க (VV)'. எளிமையான வரிகள், புதுபுது வார்த்தைகள், விரசமில்லா பாடல்கள் இது தான் தாமரையின் பலம்.
இதோ அவரது லிரிக்ஸில் ஒரு பாடல்.
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா...........)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
Saturday, January 24, 2009
வட்டார மொழிகள்
வட்டார மொழிகள்
--------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மொழி ஒவ்வொரு மாதிரியாக பேசப்படுகிறது..12 ஆம் வகுப்பு வரை நெல்லையிலேயே காலம் கடத்திய நான் கல்லூரி சேர்ந்தது கோவையில் ..
எங்கள்ள் ஊரில் பேசும் 'ஏலே போலே'(தமிழ் சினிமாவில் நெல்லை என்றவுடனே நாய் கூட லே லே ன்னு குலைப்பதை போல காட்டுவதெல்லாம் ஓவரு, பெரும்பாலும் நாகர்கோவில்/நெல்லை மக்கள் தான் லே போடுவார்கள்)கோவையில் ஏது அவமதிப்பாய் பேசுவது போல் இருந்தது..முதல் முதலில் ஹாஸ்டலில் பலத்தரபட்ட ஊர் பசங்களுடன் தங்கிய போது எங்களூர் பாஷை பேசி கிண்டலும் கேலிக்கும் உள்ளாயிருக்கிறேன்..
இப்படித்தான் ஒரு நாள் என் ரூமை சுத்தம் செய்வதற்காக 'வாரியல்' எங்கே எனக் கேட்க எல்லாரும் முழித்தார்கள் ,வாரியல் என்றால் (பெருக்குமாறு, விளக்குமாறு, கூட்டுமாறு-ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்று) துடப்பம் என்று பொருள்..
இதாவது பரவாயில்லை ஒரு நாள் காலை இன்னொரு நண்பனுடன் கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டு இருக்கும் போது , ஒருத்தன் வந்தான் 'மச்சி உன் செருப்பை நான் தொட்டு போறேண்டா' என்றான் , என் செருப்பை இவன் எதுக்கு தொடுறான் என தூக்க கலக்கத்தில் ஓகே சொல்ல அவன் பாத்ரூமுக்கு என் செருப்பை போட்டு போய் விட்டான்..தொட்டு விட்டு என்பது எடுத்துகொள்வது என்பதன் மறுஊ போல
இன்னொரு முறை விடுமுறை நாளில் பெரும்பாலும் ஹாஸ்டல் வெறிச்சோடி இருக்க , நானும் பக்கத்து அறை நண்பனுமே இருந்தோம், அவன் குளித்து விட்டு வரும்போது வழுக்கி விழ ,பலத்த அடி , நடக்கவே முடிய வில்லை, அவன் வீட்டு நம்பர் வாங்கி அவன் வீட்டு சென்று போன் செய்தேன்..'இந்த மாதிரி உங்க பையன் விழுந்து விட்டான் கால் உளுக்கு விட்டது போல நடக்கவே முடியலை' எனவும் அவர்கள்க்கு ஒன்றுமே புரியவில்லை..அப்புறம் தான் கோவையில் சுளுக்கு என்று சொல்வார்கள் எனவும் எங்களூரில் உளுக்கு என்பார்கள் எனவும் தெரிந்தது..
இப்படியாக
எங்களூரில்
அடுக்களை - கிச்சன்,சமையலறை
அண்டிப்பருப்பு- முந்திரிபருப்பு
கிஸ்மிஸ் -முந்திரி பழம்
திராட்சை - முந்திரி பழம்
பைய - மெதுவா
நிறைய வார்த்தைகள் சொல்லிக்கொண்டே போகலாம் , என் நண்பர்கள்ள் என்னை மறந்தாலும் இந்த ' பைய ' வை இன்றளவும் நியாபகம் வைத்திருப்பார்கள் , அந்த சம்பத்தை நான் இங்கே சொன்னால் அப்புறமாட்டி நீங்க டென்சன் ஆகிடுவீங்க
--------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மொழி ஒவ்வொரு மாதிரியாக பேசப்படுகிறது..12 ஆம் வகுப்பு வரை நெல்லையிலேயே காலம் கடத்திய நான் கல்லூரி சேர்ந்தது கோவையில் ..
எங்கள்ள் ஊரில் பேசும் 'ஏலே போலே'(தமிழ் சினிமாவில் நெல்லை என்றவுடனே நாய் கூட லே லே ன்னு குலைப்பதை போல காட்டுவதெல்லாம் ஓவரு, பெரும்பாலும் நாகர்கோவில்/நெல்லை மக்கள் தான் லே போடுவார்கள்)கோவையில் ஏது அவமதிப்பாய் பேசுவது போல் இருந்தது..முதல் முதலில் ஹாஸ்டலில் பலத்தரபட்ட ஊர் பசங்களுடன் தங்கிய போது எங்களூர் பாஷை பேசி கிண்டலும் கேலிக்கும் உள்ளாயிருக்கிறேன்..
இப்படித்தான் ஒரு நாள் என் ரூமை சுத்தம் செய்வதற்காக 'வாரியல்' எங்கே எனக் கேட்க எல்லாரும் முழித்தார்கள் ,வாரியல் என்றால் (பெருக்குமாறு, விளக்குமாறு, கூட்டுமாறு-ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்று) துடப்பம் என்று பொருள்..
இதாவது பரவாயில்லை ஒரு நாள் காலை இன்னொரு நண்பனுடன் கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டு இருக்கும் போது , ஒருத்தன் வந்தான் 'மச்சி உன் செருப்பை நான் தொட்டு போறேண்டா' என்றான் , என் செருப்பை இவன் எதுக்கு தொடுறான் என தூக்க கலக்கத்தில் ஓகே சொல்ல அவன் பாத்ரூமுக்கு என் செருப்பை போட்டு போய் விட்டான்..தொட்டு விட்டு என்பது எடுத்துகொள்வது என்பதன் மறுஊ போல
இன்னொரு முறை விடுமுறை நாளில் பெரும்பாலும் ஹாஸ்டல் வெறிச்சோடி இருக்க , நானும் பக்கத்து அறை நண்பனுமே இருந்தோம், அவன் குளித்து விட்டு வரும்போது வழுக்கி விழ ,பலத்த அடி , நடக்கவே முடிய வில்லை, அவன் வீட்டு நம்பர் வாங்கி அவன் வீட்டு சென்று போன் செய்தேன்..'இந்த மாதிரி உங்க பையன் விழுந்து விட்டான் கால் உளுக்கு விட்டது போல நடக்கவே முடியலை' எனவும் அவர்கள்க்கு ஒன்றுமே புரியவில்லை..அப்புறம் தான் கோவையில் சுளுக்கு என்று சொல்வார்கள் எனவும் எங்களூரில் உளுக்கு என்பார்கள் எனவும் தெரிந்தது..
இப்படியாக
எங்களூரில்
அடுக்களை - கிச்சன்,சமையலறை
அண்டிப்பருப்பு- முந்திரிபருப்பு
கிஸ்மிஸ் -முந்திரி பழம்
திராட்சை - முந்திரி பழம்
பைய - மெதுவா
நிறைய வார்த்தைகள் சொல்லிக்கொண்டே போகலாம் , என் நண்பர்கள்ள் என்னை மறந்தாலும் இந்த ' பைய ' வை இன்றளவும் நியாபகம் வைத்திருப்பார்கள் , அந்த சம்பத்தை நான் இங்கே சொன்னால் அப்புறமாட்டி நீங்க டென்சன் ஆகிடுவீங்க
உயிர்மெய்யில் என் சில கவிதைகளை
உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்..
இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705
இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705
சுஜாதா பற்றி பாலுமகேந்திரா
சாலிகிராமத்திற்கு வேறு வேலையாகப் போயிருந்த நாம், அப்படியே பாலுமகேந்திராவையும் சந்திக்க நேர்ந்தது. நாம் போன சமயம் சில போட்டோக்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மேல்நாட்டு நாயின் பல தரப்பட்ட போஸ்கள்.
''ரொம்ப அழகா இருக்கு சார். உங்க நாயா?'' என்று கேட்டோம்.
''இல்லை. எழுத்தாளர் சுஜாதாவோட நாய்'' என்றார்.
இதைத் தொடர்ந்த பாலு மகேந்திராவுடனான நீண்ட உரை யாடலின் சுருக்கம்:_
''போன டிசம்பர்ன்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்க எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.
'எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்காரு.' கற்றதும் பெற்றதும் தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.
முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனச்சேன்.
'பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது' அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில எழுதியிருந்தார்.
மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னதுதான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்ன்னு அமைதியா உக்காந்திருந்தார்.
என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தப் பார்த்துக் கேட்டார். 'என்னப்பா ஆச்சு?'
சொன்னேன்.
ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கணும். ஆனா, அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கிட்டுச் சொன்னார்...
''பாலு, நீ பாக்காத, பிரச்சினையா? நீ அனுபவிக்காததுக்கமா? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி... This is nothing..... தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don't let this unworthy person ruffle you.நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
ஒரு Heart Problem ஒரு Stroke/ இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn't this wonderful. Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ள வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You Still Can Create Magic.
உன் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரி நீ இன்னும் ஒரு அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don't let these stupid things bother you. You are a king Balu. Don't you ever forget that.
அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காப்பி சாப்பிட்டுத் திரும்பி வர்ரப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling. என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான்.
''Be happy that you are alive Balu'' ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை.
அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்காந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை.
நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்போ மிம்மியோட இந்த போட்டோஸ் கண்ல பட்டுது. 'மிம்மி'ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப்பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி.
அவரைவிட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். 'மிம்மி'யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க.
ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்... மிம்மியை வீட்ல தனியா விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க.
விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:_
''நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ர வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.''
ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம். சுப்பிரமணின்னா _ 'மூன்றாம் பிறை'ச் சுப்ரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான்.
மிம்மி பெண் நாய் என்கறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சினேகிதமாவே இருந்திச்சுங்க. சுப்பு இவனைப் பாலியல் கண்ணோட்டத்தில அணு காமல் பார்த்துக் கொள்வது எனக்கும், அகிலாவுக்கும் பெரிய வேலையாகிவிட்டது.
ரங்காவும் மாமியும் அமெரிக்காவில இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை.
ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன்.
இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன பெப்ரவரியில ரங்கா...''
தொடர்ந்து பேசிக்கொண்டே வந்த பாலுமகேந்திரா மேற்கொண்டு பேசமுடியாமல் நிறுத்தி கண்கலங்கு கிறார்..
''ரொம்ப அழகா இருக்கு சார். உங்க நாயா?'' என்று கேட்டோம்.
''இல்லை. எழுத்தாளர் சுஜாதாவோட நாய்'' என்றார்.
இதைத் தொடர்ந்த பாலு மகேந்திராவுடனான நீண்ட உரை யாடலின் சுருக்கம்:_
''போன டிசம்பர்ன்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்க எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.
'எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்காரு.' கற்றதும் பெற்றதும் தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.
முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனச்சேன்.
'பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது' அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில எழுதியிருந்தார்.
மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னதுதான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்ன்னு அமைதியா உக்காந்திருந்தார்.
என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தப் பார்த்துக் கேட்டார். 'என்னப்பா ஆச்சு?'
சொன்னேன்.
ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கணும். ஆனா, அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கிட்டுச் சொன்னார்...
''பாலு, நீ பாக்காத, பிரச்சினையா? நீ அனுபவிக்காததுக்கமா? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி... This is nothing..... தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don't let this unworthy person ruffle you.நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
ஒரு Heart Problem ஒரு Stroke/ இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn't this wonderful. Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ள வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You Still Can Create Magic.
உன் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரி நீ இன்னும் ஒரு அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don't let these stupid things bother you. You are a king Balu. Don't you ever forget that.
அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காப்பி சாப்பிட்டுத் திரும்பி வர்ரப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling. என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான்.
''Be happy that you are alive Balu'' ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை.
அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்காந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை.
நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்போ மிம்மியோட இந்த போட்டோஸ் கண்ல பட்டுது. 'மிம்மி'ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப்பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி.
அவரைவிட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். 'மிம்மி'யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க.
ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்... மிம்மியை வீட்ல தனியா விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க.
விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:_
''நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ர வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.''
ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம். சுப்பிரமணின்னா _ 'மூன்றாம் பிறை'ச் சுப்ரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான்.
மிம்மி பெண் நாய் என்கறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சினேகிதமாவே இருந்திச்சுங்க. சுப்பு இவனைப் பாலியல் கண்ணோட்டத்தில அணு காமல் பார்த்துக் கொள்வது எனக்கும், அகிலாவுக்கும் பெரிய வேலையாகிவிட்டது.
ரங்காவும் மாமியும் அமெரிக்காவில இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை.
ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன்.
இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன பெப்ரவரியில ரங்கா...''
தொடர்ந்து பேசிக்கொண்டே வந்த பாலுமகேந்திரா மேற்கொண்டு பேசமுடியாமல் நிறுத்தி கண்கலங்கு கிறார்..
Saturday, January 03, 2009
மசாலா மிக்ஸ்
மசாலாமிக்ஸ் எழுதி ரொம்ப நாளாச்சு..அதனால இதோ காரமாண ஒரு மசாலா மிக்ஸ்..
சாமியே ஐயப்பா:
இது சபரி மலை சீசன் , எல்லாரும் மாலை போடுகிறார்கள், இது கூட பேஷனாகி போய் விட்டது..ஐயப்பா சாமி பாடல்கள் நிறைந்த கேசட்கள் விற்பனை அல்லோலபடுகிறது...யுனிவர்சலில் ஒரு நோக்கியா போன் வாங்கினால்
1 ஜிபி மெம்மரி கார்டு முழுவது ஐய்யப்ப பாடல்களை அடைத்து தருகிறார்கள்..எல்லா இடத்திலும் சாமி மயம்..
மாலை போடுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது..என் மாமா வருடா வருடம் மலைக்கு போகிறார்..அவர் மாலை போட்டால் ரொம்ப சுத்தமாக இருப்பார், அவருக்கு தனி சாப்பாடு தனி சமையல்..எல்லாமே தனி..ரொம்ப பக்தியாய் இருப்பார்.விரதமெல்லாம் இருந்து போவார் மலைக்கு இன்றோ ..காலை மாலை போட்டு மாலை மாலையை எடுத்தும் விடுகிறார்கள்
இங்கே சென்னையில் ஒரு நாள் ஆபிசிலிருந்து வீட்டுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன் ஒரு சாமி செருப்பு போடாமல், சிவப்பு துண்டெல்லாம் போட்டு படிக்கட்டி தொங்கி கொண்டிருந்தார்..அரசு அலுவலர் சாமி போல..எனக்கு அப்படியே புல்லரித்து விட்டது, சே எப்படியெல்லாம் உருகிறார்கள் என..கொஞ்ச நேரத்தில் சாமி பான்பராக் பாக்கெட்டை பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு எடுத்து கசக்கி நாக்கினடியில் வைத்து கொண்டது..
இதாவது பரவாயில்லை கடந்த வார வியாழகிழமை Office பஸ்ஸில் ஏறினேன்..ஒரு employee சாமி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக உட்கார்ந்து சரணம் பாடிக்கொண்டிருந்தார்..அந்த பெண்ணும்..சுதியேத்திக்கொண்டிருந்தது..
பாவம் ஐயப்பா...சாமியே பாவம் ஐய்யப்பா!!!
விஜய் டிவி:
ஜோடி நம்பர் ஒன்னை தவிர்த்து விஜய் டிவியில் என் மனைவி பார்ப்பது 'நடந்தது என்ன'..குற்றமும் அதன் பின்னனியும்..நானும் சில வாரங்கள் பார்த்தேன் கோபிநாத்தின் குரலும், உச்சரிப்பும் , தொனியும் ..நிகழ்ச்சி நடத்தும் விதமும் மிக நல்லாயிருந்தது..'நடுரோட்டில் வழி மறிக்கும் பேய் ' எனும் ஒரு எபிசோடை 3 மாதமாய் போடுறேன் போடுறேன் என சொல்லி கடைசியாய் போட்டார்கள்..யாராவது பார்த்தீர்களா?
ஒரு சில பகுதிகள் நல்லா இருந்தது எல்லாரும் பார்க்க வேண்டிய புரோகிராம்
உயிர்மெய்:
உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்
இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705
பூ:
பூ படம் பார்க்க ஆவலாயிருக்கிறது..தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்..கேட்ட வரை படித்த வரை எல்லாரும் பாராட்டும் படமாயிருக்கிறது
நெடுநாளைக்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒரு சிறுகதையை படமாக்கி இருப்பது சந்தோமாயிருக்கிறது
திரையில் வந்த பெரும்பாலான நாவல்கள்/சிறுகதைகள் மண்ணை கவ்வியிருக்கின்றன என் ஆசான் சுஜாதாவும் தப்பிக்க வில்லை இதில்.
வாரணம் ஆயிரத்தை விட இந்த மாதிரி படங்களுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்..அப்போது தான் தமிழ் இலக்கியம் தமிழ் சினிமாவாக மாறும்
பேரரசு மாதிரி டைரடக்டர்க்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்படா!!
குறிப்பு: உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...வர்ட்டா
சாமியே ஐயப்பா:
இது சபரி மலை சீசன் , எல்லாரும் மாலை போடுகிறார்கள், இது கூட பேஷனாகி போய் விட்டது..ஐயப்பா சாமி பாடல்கள் நிறைந்த கேசட்கள் விற்பனை அல்லோலபடுகிறது...யுனிவர்சலில் ஒரு நோக்கியா போன் வாங்கினால்
1 ஜிபி மெம்மரி கார்டு முழுவது ஐய்யப்ப பாடல்களை அடைத்து தருகிறார்கள்..எல்லா இடத்திலும் சாமி மயம்..
மாலை போடுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது..என் மாமா வருடா வருடம் மலைக்கு போகிறார்..அவர் மாலை போட்டால் ரொம்ப சுத்தமாக இருப்பார், அவருக்கு தனி சாப்பாடு தனி சமையல்..எல்லாமே தனி..ரொம்ப பக்தியாய் இருப்பார்.விரதமெல்லாம் இருந்து போவார் மலைக்கு இன்றோ ..காலை மாலை போட்டு மாலை மாலையை எடுத்தும் விடுகிறார்கள்
இங்கே சென்னையில் ஒரு நாள் ஆபிசிலிருந்து வீட்டுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன் ஒரு சாமி செருப்பு போடாமல், சிவப்பு துண்டெல்லாம் போட்டு படிக்கட்டி தொங்கி கொண்டிருந்தார்..அரசு அலுவலர் சாமி போல..எனக்கு அப்படியே புல்லரித்து விட்டது, சே எப்படியெல்லாம் உருகிறார்கள் என..கொஞ்ச நேரத்தில் சாமி பான்பராக் பாக்கெட்டை பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு எடுத்து கசக்கி நாக்கினடியில் வைத்து கொண்டது..
இதாவது பரவாயில்லை கடந்த வார வியாழகிழமை Office பஸ்ஸில் ஏறினேன்..ஒரு employee சாமி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக உட்கார்ந்து சரணம் பாடிக்கொண்டிருந்தார்..அந்த பெண்ணும்..சுதியேத்திக்கொண்டிருந்தது..
பாவம் ஐயப்பா...சாமியே பாவம் ஐய்யப்பா!!!
விஜய் டிவி:
ஜோடி நம்பர் ஒன்னை தவிர்த்து விஜய் டிவியில் என் மனைவி பார்ப்பது 'நடந்தது என்ன'..குற்றமும் அதன் பின்னனியும்..நானும் சில வாரங்கள் பார்த்தேன் கோபிநாத்தின் குரலும், உச்சரிப்பும் , தொனியும் ..நிகழ்ச்சி நடத்தும் விதமும் மிக நல்லாயிருந்தது..'நடுரோட்டில் வழி மறிக்கும் பேய் ' எனும் ஒரு எபிசோடை 3 மாதமாய் போடுறேன் போடுறேன் என சொல்லி கடைசியாய் போட்டார்கள்..யாராவது பார்த்தீர்களா?
ஒரு சில பகுதிகள் நல்லா இருந்தது எல்லாரும் பார்க்க வேண்டிய புரோகிராம்
உயிர்மெய்:
உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்
இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705
பூ:
பூ படம் பார்க்க ஆவலாயிருக்கிறது..தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்..கேட்ட வரை படித்த வரை எல்லாரும் பாராட்டும் படமாயிருக்கிறது
நெடுநாளைக்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒரு சிறுகதையை படமாக்கி இருப்பது சந்தோமாயிருக்கிறது
திரையில் வந்த பெரும்பாலான நாவல்கள்/சிறுகதைகள் மண்ணை கவ்வியிருக்கின்றன என் ஆசான் சுஜாதாவும் தப்பிக்க வில்லை இதில்.
வாரணம் ஆயிரத்தை விட இந்த மாதிரி படங்களுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்..அப்போது தான் தமிழ் இலக்கியம் தமிழ் சினிமாவாக மாறும்
பேரரசு மாதிரி டைரடக்டர்க்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்படா!!
குறிப்பு: உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...வர்ட்டா
எல்லாம் காரணமாய் தான்:
தாம்பரம் செங்கல்பட்டு பேருந்து கூட்டத்தில் திணறிக் கொண்டே நகர்ந்தது.
என் பக்கத்தில் நின்றிருந்தவருக்கு போன் வந்தது,போனை எடுத்தவர் 'ஹலோ ஹலோ நான் காஞ்சிப்புரத்தில் இருக்கிறேன்!' என்றார் எதிர்முனையிடம்.எனக்கு ஆச்சர்யமாகியது.
நானும் பல முறை கவனித்திருக்கிறேன் , தாம்பரத்தில் இருந்து கொண்டு நான் திருப்பதியில் இருக்கிறேன்,திருத்தணியில் இருக்கிறேன் என்று மொபைலில் பேசுபவர்களை, ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ சே என நினைத்துக் கொண்டே கிடைத்த இருக்கையில் அமர்ந்தேன்.
அமர்ந்தவுடன் என் மொபைல் அலறியது, பிரசாத் கூப்பிடுறான்,கடந்த வாரம் என்னிடம் கடன் கேட்டிருந்தவனிடம் ,இன்று வீட்டிற்கு வா பணம் தருகிறேன் என்று சொல்லி இருந்தது நியாபகத்திற்கு வந்தது.ஆனால் திடீரென்று வீட்டில் டிவி ரிப்பேராகி விட அவனுக்கு வைத்த பணம் செலவாகிவிட்டது.
போனை எடுத்தேன், ஹலோ சொல்லு பிரசாத் ,
அவன்: எப்படி இருக்க ..
நான்:ஆங் நான் நல்லா இருக்கேன்
அவன் :: எங்கடா இருக்க இப்போ
நான்:நான் இப்போ பங்களூரில் இருக்கேண்டா !!!!
என் பக்கத்தில் நின்றிருந்தவருக்கு போன் வந்தது,போனை எடுத்தவர் 'ஹலோ ஹலோ நான் காஞ்சிப்புரத்தில் இருக்கிறேன்!' என்றார் எதிர்முனையிடம்.எனக்கு ஆச்சர்யமாகியது.
நானும் பல முறை கவனித்திருக்கிறேன் , தாம்பரத்தில் இருந்து கொண்டு நான் திருப்பதியில் இருக்கிறேன்,திருத்தணியில் இருக்கிறேன் என்று மொபைலில் பேசுபவர்களை, ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ சே என நினைத்துக் கொண்டே கிடைத்த இருக்கையில் அமர்ந்தேன்.
அமர்ந்தவுடன் என் மொபைல் அலறியது, பிரசாத் கூப்பிடுறான்,கடந்த வாரம் என்னிடம் கடன் கேட்டிருந்தவனிடம் ,இன்று வீட்டிற்கு வா பணம் தருகிறேன் என்று சொல்லி இருந்தது நியாபகத்திற்கு வந்தது.ஆனால் திடீரென்று வீட்டில் டிவி ரிப்பேராகி விட அவனுக்கு வைத்த பணம் செலவாகிவிட்டது.
போனை எடுத்தேன், ஹலோ சொல்லு பிரசாத் ,
அவன்: எப்படி இருக்க ..
நான்:ஆங் நான் நல்லா இருக்கேன்
அவன் :: எங்கடா இருக்க இப்போ
நான்:நான் இப்போ பங்களூரில் இருக்கேண்டா !!!!
Friday, January 02, 2009
கனவுகளை பட்டியலிடுங்கள்
கனவுகளை பட்டியலிடுங்கள்:::
------------------------------
முன்குறிப்பு: அது சிறுவர்கள் படிக்கும் பள்ளி, அங்கே பாடங்களை விளையாட்டாக தான் கற்று கொடுப்பார்கள், முட்டியில் பிரம்படி, முட்டிகாலெல்லாம் கிடையாது..அன்று அந்த குறிப்பிட்ட வகுப்பில் ஆசிரியை
மாணவர்களை பார்த்து 'எங்கே ஒவ்வொருவராய் வந்து நேற்று நீங்கள் கண்ட கனவை இந்த நோட்டில் எழுதுங்க' என்கிறார்..இனிமேல் கதை..
------
'எங்கே ஒவ்வொருவராய் வந்து நேற்று நீங்கள் கண்ட கனவை இந்த நோட்டில் எழுதுங்க பார்க்கலாம்'
அஷோக் எழுதினான் 'என்னை நேற்று ஒரு புலி விரட்டியது, என் அப்பா வந்து புலியை ஸ்கேலால் அடித்து விரட்டி என்னை காப்பாற்றி விட்டார்'
இ.குமார் எழுதினான் 'தான் ஆசை பட்ட டிராக் ரயிலை என் அம்மா வாங்கி தந்தார்கள், அதில் நான் பாட்டி ஊருக்கு போனேன்'
எழிலரசி எழுதினாள் 'என் தாத்தாவுக்கு சாமி வந்தது, அதை பார்த்து நான் பயந்து ஓடி ஸ்டோர் ரூமில் ஒளிந்து கொண்டேன்'
பாரதி வந்தான் 'எங்கே ஒவ்வொருவராய் வந்து நேற்று நீங்கள் கண்ட கனவை இந்த நோட்டில் எழுதுங்க பார்க்கலாம் ,அஷோக் வருகிறான் 'என்னை நேற்று ஒரு புலி விரட்டியது, என் அப்பா வந்து புலியை ஸ்கேலால் அடித்து விரட்டி என்னை காப்பாற்றி விட்டார்'
இ.குமார் வருகிறான் 'தான் ஆசை பட்ட டிராக் ரயிலை என் அம்மா வாங்கி தந்தார்கள், அதில் நான் பாட்டி ஊருக்கு போனேன்'எழிலரசி வந்தாள் 'என் தாத்தாவுக்கு சாமி வந்தது, அதை பார்த்து நான் பயந்து ஓடி ஸ்டோர் ரூமில் ஒளிந்து கொண்டேன்''
பாரதி வந்தான் ....................
பின்குறிப்பு:
இந்த கதை புரிந்தவர்கள் திங் பண்ணுங்க புரியாதவங்க என்னை பிங்(gkpstar@gmail.com) பண்ணுங்க வர்ட்டா!!!
------------------------------
முன்குறிப்பு: அது சிறுவர்கள் படிக்கும் பள்ளி, அங்கே பாடங்களை விளையாட்டாக தான் கற்று கொடுப்பார்கள், முட்டியில் பிரம்படி, முட்டிகாலெல்லாம் கிடையாது..அன்று அந்த குறிப்பிட்ட வகுப்பில் ஆசிரியை
மாணவர்களை பார்த்து 'எங்கே ஒவ்வொருவராய் வந்து நேற்று நீங்கள் கண்ட கனவை இந்த நோட்டில் எழுதுங்க' என்கிறார்..இனிமேல் கதை..
------
'எங்கே ஒவ்வொருவராய் வந்து நேற்று நீங்கள் கண்ட கனவை இந்த நோட்டில் எழுதுங்க பார்க்கலாம்'
அஷோக் எழுதினான் 'என்னை நேற்று ஒரு புலி விரட்டியது, என் அப்பா வந்து புலியை ஸ்கேலால் அடித்து விரட்டி என்னை காப்பாற்றி விட்டார்'
இ.குமார் எழுதினான் 'தான் ஆசை பட்ட டிராக் ரயிலை என் அம்மா வாங்கி தந்தார்கள், அதில் நான் பாட்டி ஊருக்கு போனேன்'
எழிலரசி எழுதினாள் 'என் தாத்தாவுக்கு சாமி வந்தது, அதை பார்த்து நான் பயந்து ஓடி ஸ்டோர் ரூமில் ஒளிந்து கொண்டேன்'
பாரதி வந்தான் 'எங்கே ஒவ்வொருவராய் வந்து நேற்று நீங்கள் கண்ட கனவை இந்த நோட்டில் எழுதுங்க பார்க்கலாம் ,அஷோக் வருகிறான் 'என்னை நேற்று ஒரு புலி விரட்டியது, என் அப்பா வந்து புலியை ஸ்கேலால் அடித்து விரட்டி என்னை காப்பாற்றி விட்டார்'
இ.குமார் வருகிறான் 'தான் ஆசை பட்ட டிராக் ரயிலை என் அம்மா வாங்கி தந்தார்கள், அதில் நான் பாட்டி ஊருக்கு போனேன்'எழிலரசி வந்தாள் 'என் தாத்தாவுக்கு சாமி வந்தது, அதை பார்த்து நான் பயந்து ஓடி ஸ்டோர் ரூமில் ஒளிந்து கொண்டேன்''
பாரதி வந்தான் ....................
பின்குறிப்பு:
இந்த கதை புரிந்தவர்கள் திங் பண்ணுங்க புரியாதவங்க என்னை பிங்(gkpstar@gmail.com) பண்ணுங்க வர்ட்டா!!!
Saturday, August 02, 2008
இழந்தவை...
காதுகளில் ஜாஸ் சங்கீதம் ஒலிக்க ,கையில் மதுக்கோப்பையுடன்,ரம்மியமாக ஆன்சைட்டில் லாப்டாப்பில் நண்பர்களுடன் சாட் பண்ணிக் கொண்டிருந்தாலும் நீங்க உண்மையாகவே சந்தோசமா இருக்கீங்களா?
இல்லை தானே ,நம் உண்மையான சந்தோஷ தருணங்கள் அந்த இளம் வயது நாட்கள் தான்..ஆம் அந்த அந்த பள்ளி நாட்கள், அந்த பரீட்சை நேரங்கள்,மழைக்காலங்கள்,கோடை விடுமுறைகள், திருவிழா இரவுகள் என நீண்டுகொண்டே போகும் அந்த பால்ய காலத்துக்கு பயணிக்கும் தொடர் தான் இந்த இழந்தவை.....வாங்க பயணிக்கலாம்
இழந்தவை:
--------------
வருட விடுமுறையில் மாமாவின் கையில் படுத்துக் கொண்டு
தாமிரபரணியில் நீச்சலடித்த காலைநேரங்கள்
இனக்கவர்ச்சியை எல்லாம் காதல் என அர்த்தப்படுத்திக்கொண்டு
அழகான பெண்களின் பின்னால் சைக்கிளில் சுற்றிய தருணங்கள்
வீட்டில் தோட்டம் போட ஆசைப்பட்டு ரோட்டோரம் முளைத்து நிற்கும்
தக்காளிச் செடிகளை அனல் வீசும்
மத்தியான நேரங்களில் யாரும் பார்த்து விடாமல்
பிடுங்கி வீட்டில் நட்டி நீர்பாய்ச்சிய நாட்கள்.
குற்றால சீசனில் எங்களூரிலும் இளவெயிலோடு சாரலடிக்கும் மாதங்களில்
ஆப் சைட் வைத்து ஆடிய மினி கிரிக்கெட் மாட்ச்சுகள்
---------------------------------
இல்லை தானே ,நம் உண்மையான சந்தோஷ தருணங்கள் அந்த இளம் வயது நாட்கள் தான்..ஆம் அந்த அந்த பள்ளி நாட்கள், அந்த பரீட்சை நேரங்கள்,மழைக்காலங்கள்,கோடை விடுமுறைகள், திருவிழா இரவுகள் என நீண்டுகொண்டே போகும் அந்த பால்ய காலத்துக்கு பயணிக்கும் தொடர் தான் இந்த இழந்தவை.....வாங்க பயணிக்கலாம்
இழந்தவை:
--------------
வருட விடுமுறையில் மாமாவின் கையில் படுத்துக் கொண்டு
தாமிரபரணியில் நீச்சலடித்த காலைநேரங்கள்
இனக்கவர்ச்சியை எல்லாம் காதல் என அர்த்தப்படுத்திக்கொண்டு
அழகான பெண்களின் பின்னால் சைக்கிளில் சுற்றிய தருணங்கள்
வீட்டில் தோட்டம் போட ஆசைப்பட்டு ரோட்டோரம் முளைத்து நிற்கும்
தக்காளிச் செடிகளை அனல் வீசும்
மத்தியான நேரங்களில் யாரும் பார்த்து விடாமல்
பிடுங்கி வீட்டில் நட்டி நீர்பாய்ச்சிய நாட்கள்.
குற்றால சீசனில் எங்களூரிலும் இளவெயிலோடு சாரலடிக்கும் மாதங்களில்
ஆப் சைட் வைத்து ஆடிய மினி கிரிக்கெட் மாட்ச்சுகள்
---------------------------------
Sunday, July 27, 2008
நான் தாங்க பாரதி கண்ணம்மா வந்திருக்கேன்
நான் தாங்க பாரதி கண்ணம்மா வந்திருக்கேன்
I am Back : ஆமாங்க ரொம்ப நாளா பிளாக எழுதாம இருந்த நான் இப்போ மறுபடி எழுத ஆரம்பிச்ச காரணம் என்னவென்றால்
அப்படின்னு மூணு பார்ட் எழுதி மொக்கை போட நான் தயாரில்லை, நேரம் கிடக்கும் போது தரமா எழுத முயற்சி செய்கிறேன் , என்னோட பிளாக் படிக்காம நிம்மதியா இருந்த உங்களை தொந்தரவு படுத்த இதோ நான்....
இந்த வாரம் ஒரு கவிதையோடு....
பள்ளிக் கல்வி:
---------------
தமிழ்:
------
கயல்விழி காலை எழுகிறாள்
தாய் மானின் நிழலில் குட்டி மான்
பத்து திருக்குற்ள்கள்
சிலப்பதிகாரம்
குறுந்தொகை
பாரதியாரின் தந்தை பெயர்
நாராய் நாராய் செங்கால் நாராய்
தெளிவுரை ,விளக்கவுரை
வஞ்சபுகழ்ச்சி அணி
உறுப்பிலக்கணம்
குற்றியலுகரம் ,குற்றியலிகரம்
அண்ணாவின் செவ்வாழை
ஆறு தன் வரலாறு கூறுதல்
செம்மொழியாம் தமிழ்.
I am Back : ஆமாங்க ரொம்ப நாளா பிளாக எழுதாம இருந்த நான் இப்போ மறுபடி எழுத ஆரம்பிச்ச காரணம் என்னவென்றால்
அப்படின்னு மூணு பார்ட் எழுதி மொக்கை போட நான் தயாரில்லை, நேரம் கிடக்கும் போது தரமா எழுத முயற்சி செய்கிறேன் , என்னோட பிளாக் படிக்காம நிம்மதியா இருந்த உங்களை தொந்தரவு படுத்த இதோ நான்....
இந்த வாரம் ஒரு கவிதையோடு....
பள்ளிக் கல்வி:
---------------
தமிழ்:
------
கயல்விழி காலை எழுகிறாள்
தாய் மானின் நிழலில் குட்டி மான்
பத்து திருக்குற்ள்கள்
சிலப்பதிகாரம்
குறுந்தொகை
பாரதியாரின் தந்தை பெயர்
நாராய் நாராய் செங்கால் நாராய்
தெளிவுரை ,விளக்கவுரை
வஞ்சபுகழ்ச்சி அணி
உறுப்பிலக்கணம்
குற்றியலுகரம் ,குற்றியலிகரம்
அண்ணாவின் செவ்வாழை
ஆறு தன் வரலாறு கூறுதல்
செம்மொழியாம் தமிழ்.
Subscribe to:
Posts (Atom)

