--------------------------------------------------------------------------------
சமீபத்தில் டி நகரில் நண்பனின் திருமணத்திற்கு போய் விட்டு திரும்பையில் ஏன் தினமும் டிரைனில் போகனும் இன்று ஒரு நாள் பஸ் ல் போகலமென பஸ் இல் ஏறினோம் நானும் ஒரு நண்பனும்.
கடைசிக்கு முந்தின ஸீட் அது , இரண்டு இளைஞர்கள் அவர்கள் வாங்கின உடைகளை பற்றி பேசி கொண்டிருநதர்கள்..நான் முதலில் அதை கவனிக்க வில்லை..கொஞ்ச நேரத்தில் அவர்கள் பேசுவதை கவனிகக ஆரம்பித்தேன்
ஏனெனில் அவர்களது பேச்சு அப்படி..ஒருவன் மற்றொருவனிடம் 'ஏண்டி அந்த ப்ளு கலர் டி ஷர்ட் எனக்கு எப்படி டி இருக்கும்..அம்மா ப்ளூ கலர் கண்டாலே எரிஞ்சு விழும்' என்றான்..அவர்கள் பேசுவது எனக்கு வித்தியாஸமாக படவே காதுகளை கூர்மையாக்கினேன்
இதற்கிடையில் கடைசி ஸீடடை நோக்கி வருபவர்களிடம் எல்லாம் அவன் பேச்சு கொடுக்க ஆரம்பிச்சான்..சிலர் பேசினர் சிலர் புறக்கணித்தனர்..
நான் மெதுவா திரும்பி பார்தேன் தாடி..மீசை நேர்தியான தலை சீவல் என மதுரை சம்பவம் ஹீரோ 22 வயசில் இருப்பது போல இருந்தான்
இன்னொருத்தன் மீசை எடுத்திருந்தான்..வளுவளுவென முகம் அவனிடம் பெண்மையின் அறிகுறி மதுரை ஹீரோ வை விட அதிகம் தெரிந்தது.
கடைசி சீட்டில் வந்த இரு ஐடி இளைர்களிடம் இவன் 'ஏன் சார் என்னை வீட்டுல டிராப் பண்றீங்களா ரொம்ப கஸ்டமா இருக்கு பஸ் ல போக' என்றான்
சிரித்து கொண்டே அந்த குரலில் பெண்மை வழிந்து கொண்டிருந்தது..அவர்களை அவன கண்டுகாகமல் அவன் உடன் வந்தவுனுடன் பேசி கொண்டான்..மீண்டும் இவன் ஏன் ஸார் உங்க கிடட தானே பேசுறேன் என உரக்க கேட்க அவர்கள் கடுப்பாகி உனக்கு என்ன வேணும் இப்போ என்றார்கள் அவர்களுக்கும் இவனை தெரிஞ்சு விட்டது போல உடனெ பெண்மை 'இதுகெலலம் ஜந்துகடி ஏன் தான் இப்படி இருக்காங்களோ என் ஒரு ஜோக் சொன்னான்..அசிங்கமாய்..யாரும் சிரிககாதது கண்டு இன்னும் உரத்த குரலில் இவன்களுக்கு எல்லாம் சென்ஸா ஆஃப் ஹுமர் ஏ இல்லை ஜடம் என்றான் கோவதுதுடன் தன் நண்பனி(பியி)டம்
யாரும் அவர்களை திட்ட வில்லை எனக்கு சிரிப்பு வந்தாலும் அவர்கள் மேல் பரிதாபமும் வந்தது ஏன் கடவுள் (அப்படி ஒருத்தர் இருந்தா) இப்படி ஒரு சோதனை இந்த இளைஞர்களுக்கு என யோசித்து கொண்டிருந்தேன்..இதறகுள் அவன் என்னிடமும் என் நண்பனிடமும் 'க்ரீன் ஷர்ட் ஸார் உங்களை தான் நீங்களாவது வீட்டுல கொண்டு போய் விடுறீங்ளா' என கேட்க நண்பன் கெக்கலித்து கொண்டிருந்தான்
இவர்களை போன்றவர்களை நான் நிறைய சமையங்ளில் சந்தித்து இருகிறேன்..சேலம் பதையில் பஸ் இல் இவர்களை தொந்தரவு அதிகம் இருக்கும் என நண்பன் சொல்ல கேட்டிருகிறேன்
இவர்கள் முழுவதும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறியவர்கள் அல்ல..அந்த மாற்றத்தை நோக்கி போய் கொண்டு இருப்பவர்கள்..ஆண்கள் போலவே இருப்பார்கள் ..நல்லவே பேசுவார்கள்..மெதுவாக உடலில் கை போடுவார்கள்
அப்போது தான் நமக்கு புரிய ஆரம்பிக்கும்..
கோவையில் படிக்கும் போது அந்த அதிகலையில் ஊரிலிருது கோவைக்கு சேர்ந்த உடனே காந்தி புரம் பஸ் ஸ்டாண்ட் ல் 3 டி காக வெயிட் பண்ணும் சமயங்களில் மெதுவாய் வந்து பேச்சு கொடுத்திருகிறார்கள்..சில சமயம் பஸ் பக்கத்து ஸீட்டில் அமர்ந்து கொண்டு சிரிக்க சிரிக்க பேசி
இந்த பேண்ட் எங்கே தச்சது என கைகளை உடலில் பரப்புவார்கள்..
இவர்கள் மேல் அந்த சமயத்தில் கோவம் வந்தாலும் பின் ஏன் இவங்க மட்டும் இப்படி இவர்கள் ..மனக்குழ்பபதிற்கு என்ன தான் வடிகால்..உடல் மாற்றங்ளை ஏன் இந்த சமூகம் ஏற்றுகொள்ள மறுக்கிறது..உடல் ஊனமுற்றவரகளை மாற்று திறன் படைத்தோர் என
பெருமைப்படுத்தும் நாம் இவர்களை ஏன் கேலியும் கிண்டலும் செய்கிறோம் என யோசிக்க தோணும்.
பெரும்பாலனோர்கள் அந்த ரெண்டும்கட்டாம் உடல்மாற்றதில் வீட்டை விட்டு வெளியேறுவது தான் நடக்கிறது.பெற்றோர்களும் அவர்களை அவமானமாய் கருதி வெளியேறினால் சந்தோஸம் என விட்டு விடுகின்றனர்
அவர்கள் பின் நாட்களில் எப்படியாது ஒரு கூட்டதோட சேர்ந்து வழக்கமான தொழில்களை கற்று கொண்டு வாழவும் பழகி கொள்கின்றனர்
எந்த திருநங்கையாவது மீண்டும் வீட்டுக்கு போய் நான் தான் உங்கள் மகள் வந்துருக்கிறேன் என்று பெற்றொர்களை குற்ற் உணர்ச்சியில் இது வரை ஆழ்த்தியிருப்பார்களா?
கலேஜ் நேரத்தில் கோவைபுதூரில் தங்கி இருந்த போது ஒரு மெஸ்ஸில் போய் சாப்பிடுவோம் எப்போதும்..அந்த மெஸ்ஸில் ஒரு பையன் இருந்தான் ஸர்வராக..எல்லா வேலையும் செய்து கொண்டு
காலேஜ் பசங்க துணிகளை துவைத்தும் தருவான்,வீட்டு வேலைகளும் செய்வான்..அந்த மெஸ்ஸில் தான் நாங்கள் விகடனும் மற்ற புக்ஸ் வாங்குவோம் சாப்பிட பெரும்பாலும் யூஸ் பண்ண மாட்டோம்..இங்கே புக் வாங்கினால் மெதுவாய் காசு கொடுத்தால் போதும்
இப்படி புக்குக்கு ஒரு கடை பிரியாணி க்கு ஒன்னு தம் க்கு ஒன்னு என எல்லா இடத்துலயும் அக்கொவுன்ட் வச்சிருப்போம்
மெஸ்ஸில் இருந்த அந்த பையன் என்னை பார்த்தாலே 'என்ன திருநெல்வேலிகாரரே சௌவுக்கியமா' என என் சுருள் தலைமுடியை கோதுவான் எனக்கு பயமாய் இருக்கும்..எல்லாருக்கும் ஒரு பேரு வைத்திருந்தான் ..சில இளைஞர்களிடம் நெருங்கி பேசினான்
எல்லாரும் அவனை நைட் கிரவுண்ட் பக்கம் வாடன்னு சொல்ல ..;பொங்கென்னே' னு சிரிப்பான்..
எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடய கதாவிலாஸத்தில் இதை பற்றி எழுத்திருப்பாரு..அவருடைய ஊரில் இந்த மாதிரி ஒரு பையன் வசித்தான் அவனுக்கு அப்பா அம்மா கிடையாது
அவன் தாத்தவிடம் தான் வளர்ந்தான்..வளர வளர அவனுடைய வழக்கங்கள் மாறி வந்தது பெண்களுடன் கோவிலுக்கு போதுல் ,பூ தொடுத்தல் என பெண்களுடனே இருக்க விரும்பினான்
ஒரு முறை இந்த பையனின் பக்கத்து வீட்டு அக்காவிற்கு திருமணம்..இவன் தான் பெண் போல எல்லா வேலையும் ஓடி ஆடி செய்து கொண்டிருந்தான்
அவன் தாத்தா இவனை திருதத முடியாதென விட்டு விடுவார்..திருமண நாளன்று காலையில் ஏதோ சத்தம் கேட்க என்னவென்று பார்த்தால் இந்த பையனை போட்டு எல்லாரும் அடித்து கொண்டிர்புபார்கள்..தாத்தா அவசரமா போய் ப்ரர்த்து விசாரித்தால் அந்த பையன் காலையில் மாப்பிள்ளை கிணற்று அடியில் குளித்து கொண்டிருக்கும் போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பான்
இதை கேட்டவுடன் தாத்தவும் அவனை பயங்கரமாக அடிப்பார்..ஒரு கட்டத்தில் அடி தாள முடியாமல் 'கொண்டய்யா(அவன் தாத்தா பெயர்) என்ன இப்படி அடிக்குறதுக்கு பதிலா அந்த மாபிள்ளைக்கே என்னை கட்டி வச்சிரு ' என்று சொல்லுவான் என்று முடித்திருப்பாரு எஸ் ரா..இதை படித்த உடனே அந்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு யோசிகக ஆரம்பித்து விட்டேன்
இப்போது திருநங்கைகள் டிவி நிகழ்சிசிகள் நடத்துவதும் வெப்ஸைட் ஆரம்பிப்பதும் பரதம் ஆடுவதும் வரவேற்க தக்க விஷயம்...அவர்களையும் நம்மோடு சேர்த்து கொள்வோம்
ps:
தாமபரம் நெருங்கும் போது அந்த மதுரை ஹேரோ அவன் அம்மாவிற்கு போன் செய்து நீங்க கேட்டை இ சாத்திட்டு தூங்குகும்மா என்று இன்னும் பெண் குரலில் பேசி கொண்டிருந்தான் அவனுக்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்
Tuesday, November 10, 2009
Thursday, October 15, 2009
கண்டு புடிங்க என்ன படம் னு & பாடலாசிரியர்கள் பெயரும்
1
காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே
2
கம்ப நாடன் உன்னை கண்டால் சீதை என்று துள்ளுவான்
3
சொர்கத்தில் இருந்து யாரோ அனுப்பும் காதல் கடிதம் இன்று தான் வந்தது
4
உதடுகள் உரசிட தா..னே...
வலிகளும் குறைந்திடும் மா..னே
5
நந்தவனக் கரையில்...நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை..யார் பறித்தார்
6
மழையும் வெயிலும் என்ன..
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே
2
கம்ப நாடன் உன்னை கண்டால் சீதை என்று துள்ளுவான்
3
சொர்கத்தில் இருந்து யாரோ அனுப்பும் காதல் கடிதம் இன்று தான் வந்தது
4
உதடுகள் உரசிட தா..னே...
வலிகளும் குறைந்திடும் மா..னே
5
நந்தவனக் கரையில்...நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை..யார் பறித்தார்
6
மழையும் வெயிலும் என்ன..
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
Friday, September 04, 2009
மசாலா மிக்ஸ்- பாரதி,சாண்டில்யன்
சுவையான சம்பவங்கள் - பாரதி:
------------------------------
காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” –என்று
Poem:
----
தனித்து நடந்து செல்கிறேன்
வாழ்வின்
இருள் கனத்த வீதிகளில்
தனித்து நடந்து செல்கிறேன் .
யாரோ என் கரங்களைப் பற்றுகிறார்கள் .
பயமாக இருக்கிறது .
இப்போது தம் கரங்களை
விடுவித்துக் கொண்டார்கள்
இப்போது மிகமிக பயமாக இருக்கிறது .
Tamil:
-------
தற்குறிப்பேற்ற அணி
தமிழ் இலக்கணத்தில் "தற்குறிப்பேற்ற அணி" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது.
தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. உதாரணம்:
இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள்.
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
இதன் பொருள்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
அதே போல் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்ப்போம்.
"மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடைத் தேய்ந்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று"
பாடலின் பொருள்: மண்ணுலகைத் தாங்கும் தோள்வலிமையுடைய கிள்ளியின் மதயானை போரில் பகை அரசர்களுடைய வெண்கொற்றக்குடையைச் சிதைத்தது. அந்தச் சினத்தோடு (வெண்கொற்றக்குடை என நினைத்து) வானிலேறி நம்மீதும் பாயுமோ என குளிர்நிலவு அஞ்சித் தேய்கிறது.
சந்திரன் தேய்வது இயல்பு. பகைவரின் வெண்கொற்றக்குடையை தேய்த்தது போல் தன்னையும் தேய்க்குமோ என சந்திரன் அஞ்சித் தேய்வதாகக் கூறியது பெயர்பொருள் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறிய தற்குறிப்பேற்றம் ஆகும்.
சாண்டில்யன் எழுதிய "யவண ராணி" கதையில் ஒரு அத்தியாயம் பூராவும், அந்த ராணி குளிப்பதை விவரிக்க நிறைய தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியிருப்பார் சாண்டில்யன். சில உதாரணம் இங்கே...
"யவண ராணி ஆடை இல்லாமல் குளிப்பதை, சந்திரன் (நிலா) மறைந்திருந்து பார்ப்பான். அந்த சந்திர ஒளி ராணியின் உடல் மீது வட்ட வட்டமாக விழும்." அது இயல்பான ஒன்றுதான். ஆனால் கவிஞர், இதற்கு, "ராணியின் அழகில் மயங்கி சந்திரன் அவள் மீது பொற்காசுகளை வீசுகிறான்" என்று எழுதியிருப்பார். இது தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரு அறுமையான எடுத்துக்காட்டு.
அதேபோல் "ராணி குளித்து முடித்துவிட்டு, தன் உடலை துவட்டிய துணியை, ஒரு மரத்தின் மீது காயப்போடுவாள்." அப்பொழுது அந்தத் துணி "நான் இவ்வளவு நேரம் இந்தப் பேரழகியின் உடலின் பல இடங்களில் படர்ந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த மரத்தின் மீது என்னை காயப்போட்டுவிட்டாளே" என கண்ணீர் வடிப்பதாக எழுதியிருப்பார். ஈரமான துணியில் இருந்து நீர் சொட்டுவது இயல்பு. அதை கண்ணீர் வடிப்பதாக் தன்குறிப்பை ஏற்றி அழகாக கூறியிருப்பார் சாண்டில்யன்
------------------------------
காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” –என்று
Poem:
----
தனித்து நடந்து செல்கிறேன்
வாழ்வின்
இருள் கனத்த வீதிகளில்
தனித்து நடந்து செல்கிறேன் .
யாரோ என் கரங்களைப் பற்றுகிறார்கள் .
பயமாக இருக்கிறது .
இப்போது தம் கரங்களை
விடுவித்துக் கொண்டார்கள்
இப்போது மிகமிக பயமாக இருக்கிறது .
Tamil:
-------
தற்குறிப்பேற்ற அணி
தமிழ் இலக்கணத்தில் "தற்குறிப்பேற்ற அணி" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது.
தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. உதாரணம்:
இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள்.
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
இதன் பொருள்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
அதே போல் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்ப்போம்.
"மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடைத் தேய்ந்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று"
பாடலின் பொருள்: மண்ணுலகைத் தாங்கும் தோள்வலிமையுடைய கிள்ளியின் மதயானை போரில் பகை அரசர்களுடைய வெண்கொற்றக்குடையைச் சிதைத்தது. அந்தச் சினத்தோடு (வெண்கொற்றக்குடை என நினைத்து) வானிலேறி நம்மீதும் பாயுமோ என குளிர்நிலவு அஞ்சித் தேய்கிறது.
சந்திரன் தேய்வது இயல்பு. பகைவரின் வெண்கொற்றக்குடையை தேய்த்தது போல் தன்னையும் தேய்க்குமோ என சந்திரன் அஞ்சித் தேய்வதாகக் கூறியது பெயர்பொருள் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறிய தற்குறிப்பேற்றம் ஆகும்.
சாண்டில்யன் எழுதிய "யவண ராணி" கதையில் ஒரு அத்தியாயம் பூராவும், அந்த ராணி குளிப்பதை விவரிக்க நிறைய தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியிருப்பார் சாண்டில்யன். சில உதாரணம் இங்கே...
"யவண ராணி ஆடை இல்லாமல் குளிப்பதை, சந்திரன் (நிலா) மறைந்திருந்து பார்ப்பான். அந்த சந்திர ஒளி ராணியின் உடல் மீது வட்ட வட்டமாக விழும்." அது இயல்பான ஒன்றுதான். ஆனால் கவிஞர், இதற்கு, "ராணியின் அழகில் மயங்கி சந்திரன் அவள் மீது பொற்காசுகளை வீசுகிறான்" என்று எழுதியிருப்பார். இது தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரு அறுமையான எடுத்துக்காட்டு.
அதேபோல் "ராணி குளித்து முடித்துவிட்டு, தன் உடலை துவட்டிய துணியை, ஒரு மரத்தின் மீது காயப்போடுவாள்." அப்பொழுது அந்தத் துணி "நான் இவ்வளவு நேரம் இந்தப் பேரழகியின் உடலின் பல இடங்களில் படர்ந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த மரத்தின் மீது என்னை காயப்போட்டுவிட்டாளே" என கண்ணீர் வடிப்பதாக எழுதியிருப்பார். ஈரமான துணியில் இருந்து நீர் சொட்டுவது இயல்பு. அதை கண்ணீர் வடிப்பதாக் தன்குறிப்பை ஏற்றி அழகாக கூறியிருப்பார் சாண்டில்யன்
ஆன்சைட்டு
என் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் என் மனைவியின் அத்தை பெண் திருமணம் வந்தது , புதிதாய் திருமணம் ஆனவர்கள் மற்றொரு திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது ஒரு வழக்கம்
என் திருமணத்திற்கு கூட என் பள்ளி நண்பி ஒருத்தி வந்திருந்தாள் ,அவளுக்கு 2 வாரம் முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது..
என் மனைவியின் அத்தை பெண் திருமணத்தில் மனைவியின் சேலையை பிடித்துக்கொண்டே அவள் பின்னே உட்கார்ந்திருந்தேன்..எல்லாரிடமும் என்னை அறிமுகபடுத்தினார்கள் நான் கூச்சத்தில் நெளிந்தேன்..ஏற்கனவே நான் shy டைப் வேறயா(!!!) அதனால் எல்லாரையும் பார்த்து சிரித்து வைத்தேன்..என் காதல் திருமணத்திற்கு வர மறுத்த பல பெரிசுகளிடம் என்னை என் மனைவி வீட்டார் அறிமுகபடுத்தி பாடாய்படுத்தினார்கள்
அப்படி ஒரு பெரிசுகிட்ட என் மாமியார் என்னை அறிமுகப்படுத்த , அது என்னய பார்த்து முதல்ல கேட்ட கேள்வி
"என்னப்பா பாரின்லாம் போலா"(அடேய் நான் இன்னும் புராஜக்ட்குள்ளேயே போகல.. பார் யுவர் இன்பார்மேசன் நான் அப்போதும் பென்சில் தான் இருந்தேன்)
"ஹி ஹி இல்லைங்க ..போவனும்" (நான்)
"என் பேரன் மெட்ராசுல அது என்ன ccs ஆ ஆங்க அதுல சேர்ந்து ஆறு மாசத்துல பாரின் போய்ட்டானே" (இது என்ன பெரிய விஷயம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஆபர் லெட்டர் கிடைச்ச உடனே பாரின் போய்ட்டாரே)
"அப்படியா சந்தோஷ்ம்" (யோவ் போய் வெத்தலய குதப்பிக்கிட்டு ஓராமா உட்காரும்வோய்)
"சீக்கிரனும் போயிரனும் சரியா" (நானும் அதே தான் சொல்றேன் நீங்களும் சீக்கிரமா போயிரனும்)
ஒரு வழியா எஸ்கேப் ஆகி போனா, மாமியார் என்னை மனைவ்யின் அத்தை பையனிடம் அறிமுக(படுத்தினார்) ..அவனோ ஆன்சைட்டில் தான் காலம் தள்ளுகிறான் போல
"ஹாய் சாரி யார் ஐ வோஸ் நாட் ஏபில் டு கம் டு யுவர் மேரேஜ்" (ஆஹா இங்கிலிசுல பீட்டர் உடுறானே என்ன பண்றது ..மாமியார் முன்னாடி இவன்கிட்ட டமில்ல பேசினா மருவாதை இல்லையேன்னு வாய்க்குள்ள ரிகர்சல் பார்த்து..)
"ஹே தாட்ஸ் ஓகே" (அப்பாடி பேசியாச்சு..இங்கிலிசு பேசியாச்சு)
இந்த சமயத்தில் என் மாமியாரை யாரோ கூப்பிட , ஆத்தாடி எஸ்கேப் இனிமே பாருடா மவனே ன்னு அவன் அடுத்த வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி நானே
"எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க" (மருவாதையா டமில்ல பதில் சொல்லு இல்லனா சங்க(கழுத்த) நெரிச்சிருவேன்)..
"ஆக்சுவலா" அப்படின்னு ஆரம்பிச்சு மறுபடி இங்கிலிசு (டேய் உண்மையிலேயே உனக்கு தமிழ் தெரியாதா)
அடுத்து நான் என்ன டொமைன், பிளாட்பார்ம் எல்லாம் கேட்டான்..நான் பெஞ்சில் இருப்பதை சொல்லாமல அப்போதைக்கு டிரயினிங் போயிக்கிட்டு இருந்த
AS 400 ஐ சொல்லித் தொலைச்சேன்
'ஹோ இசிட் லைக் மெயின்பிரேம்' (நல்ல வேளை இவனுக்கு as 400 தெரியல)
'யா இட்ஸ் ஆக்சுவலி அ மினி கம்ப்யூட்டர்' (அப்படித்தான் ppt ல போட்டிருந்தது!!!)
அவனிடம் தப்பு தப்பாய் கொஞ்ச நேரம் பேசி எஸ்கேப் ஆகி மூச்சு வாங்கி வீட்டுக்கு வந்த உடனே என் மனைவிட்ட ரொம்பா கோவமாய் 'இனிமே எந்த கல்யாணத்துக்கும் என்னை கூப்பிடாத" ன்னு request பண்ணினேன்
பொதுவாக ஆன்சைட்டு பத்தி எனக்கு நெகட்டிவ் பீலீங்க்ஸ் தான் இருக்கு..அங்க போய் சோத்துக்கு அலையனும்,ரொம்ப கஸ்ட படனும்...ஆனா சில டைம் நம்ம கூடயே பென்சுல உட்கார்ந்திருந்து திடுதிடுப்புன்னு ஒரு நாள் ஆன்சைட்டு போயி அங்க பாதாள சாக்கடை வாசல்ல பேண்டுக்குள்ளாற ரெண்டு கையும் உட்டு போட்டோ எடுத்து பிகாசாசிலோ,ஆர்குட்டிலோ அப்டேட் பண்ணிட்டு மெயில் அனுப்புவானுக பாருங்க அதை பார்க்கும் போது ஒயின்ஷாப்புல போய் டூப்ளிகேட் சரக்கே அடிக்கலாம் போல் தோனும்...
ஆன்சைட்டு போயிட்டு எல்லாரும் அவங்க அனுபவம் எழுதும் போது எனக்கு ஆசையாயிருக்கும் நாமளும் ஒரு நாள் இப்படி எழுதுவோம்டா என..ஆனா குடும்பத்த இங்க விட்டுட்டு பணத்தை துரத்தில் ஹெல்த் ஸ்பாயில் பண்றோம்ன்னு நினைச்சா கஸ்டமா இருக்கு..
உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க
என் திருமணத்திற்கு கூட என் பள்ளி நண்பி ஒருத்தி வந்திருந்தாள் ,அவளுக்கு 2 வாரம் முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது..
என் மனைவியின் அத்தை பெண் திருமணத்தில் மனைவியின் சேலையை பிடித்துக்கொண்டே அவள் பின்னே உட்கார்ந்திருந்தேன்..எல்லாரிடமும் என்னை அறிமுகபடுத்தினார்கள் நான் கூச்சத்தில் நெளிந்தேன்..ஏற்கனவே நான் shy டைப் வேறயா(!!!) அதனால் எல்லாரையும் பார்த்து சிரித்து வைத்தேன்..என் காதல் திருமணத்திற்கு வர மறுத்த பல பெரிசுகளிடம் என்னை என் மனைவி வீட்டார் அறிமுகபடுத்தி பாடாய்படுத்தினார்கள்
அப்படி ஒரு பெரிசுகிட்ட என் மாமியார் என்னை அறிமுகப்படுத்த , அது என்னய பார்த்து முதல்ல கேட்ட கேள்வி
"என்னப்பா பாரின்லாம் போலா"(அடேய் நான் இன்னும் புராஜக்ட்குள்ளேயே போகல.. பார் யுவர் இன்பார்மேசன் நான் அப்போதும் பென்சில் தான் இருந்தேன்)
"ஹி ஹி இல்லைங்க ..போவனும்" (நான்)
"என் பேரன் மெட்ராசுல அது என்ன ccs ஆ ஆங்க அதுல சேர்ந்து ஆறு மாசத்துல பாரின் போய்ட்டானே" (இது என்ன பெரிய விஷயம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஆபர் லெட்டர் கிடைச்ச உடனே பாரின் போய்ட்டாரே)
"அப்படியா சந்தோஷ்ம்" (யோவ் போய் வெத்தலய குதப்பிக்கிட்டு ஓராமா உட்காரும்வோய்)
"சீக்கிரனும் போயிரனும் சரியா" (நானும் அதே தான் சொல்றேன் நீங்களும் சீக்கிரமா போயிரனும்)
ஒரு வழியா எஸ்கேப் ஆகி போனா, மாமியார் என்னை மனைவ்யின் அத்தை பையனிடம் அறிமுக(படுத்தினார்) ..அவனோ ஆன்சைட்டில் தான் காலம் தள்ளுகிறான் போல
"ஹாய் சாரி யார் ஐ வோஸ் நாட் ஏபில் டு கம் டு யுவர் மேரேஜ்" (ஆஹா இங்கிலிசுல பீட்டர் உடுறானே என்ன பண்றது ..மாமியார் முன்னாடி இவன்கிட்ட டமில்ல பேசினா மருவாதை இல்லையேன்னு வாய்க்குள்ள ரிகர்சல் பார்த்து..)
"ஹே தாட்ஸ் ஓகே" (அப்பாடி பேசியாச்சு..இங்கிலிசு பேசியாச்சு)
இந்த சமயத்தில் என் மாமியாரை யாரோ கூப்பிட , ஆத்தாடி எஸ்கேப் இனிமே பாருடா மவனே ன்னு அவன் அடுத்த வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி நானே
"எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க" (மருவாதையா டமில்ல பதில் சொல்லு இல்லனா சங்க(கழுத்த) நெரிச்சிருவேன்)..
"ஆக்சுவலா" அப்படின்னு ஆரம்பிச்சு மறுபடி இங்கிலிசு (டேய் உண்மையிலேயே உனக்கு தமிழ் தெரியாதா)
அடுத்து நான் என்ன டொமைன், பிளாட்பார்ம் எல்லாம் கேட்டான்..நான் பெஞ்சில் இருப்பதை சொல்லாமல அப்போதைக்கு டிரயினிங் போயிக்கிட்டு இருந்த
AS 400 ஐ சொல்லித் தொலைச்சேன்
'ஹோ இசிட் லைக் மெயின்பிரேம்' (நல்ல வேளை இவனுக்கு as 400 தெரியல)
'யா இட்ஸ் ஆக்சுவலி அ மினி கம்ப்யூட்டர்' (அப்படித்தான் ppt ல போட்டிருந்தது!!!)
அவனிடம் தப்பு தப்பாய் கொஞ்ச நேரம் பேசி எஸ்கேப் ஆகி மூச்சு வாங்கி வீட்டுக்கு வந்த உடனே என் மனைவிட்ட ரொம்பா கோவமாய் 'இனிமே எந்த கல்யாணத்துக்கும் என்னை கூப்பிடாத" ன்னு request பண்ணினேன்
பொதுவாக ஆன்சைட்டு பத்தி எனக்கு நெகட்டிவ் பீலீங்க்ஸ் தான் இருக்கு..அங்க போய் சோத்துக்கு அலையனும்,ரொம்ப கஸ்ட படனும்...ஆனா சில டைம் நம்ம கூடயே பென்சுல உட்கார்ந்திருந்து திடுதிடுப்புன்னு ஒரு நாள் ஆன்சைட்டு போயி அங்க பாதாள சாக்கடை வாசல்ல பேண்டுக்குள்ளாற ரெண்டு கையும் உட்டு போட்டோ எடுத்து பிகாசாசிலோ,ஆர்குட்டிலோ அப்டேட் பண்ணிட்டு மெயில் அனுப்புவானுக பாருங்க அதை பார்க்கும் போது ஒயின்ஷாப்புல போய் டூப்ளிகேட் சரக்கே அடிக்கலாம் போல் தோனும்...
ஆன்சைட்டு போயிட்டு எல்லாரும் அவங்க அனுபவம் எழுதும் போது எனக்கு ஆசையாயிருக்கும் நாமளும் ஒரு நாள் இப்படி எழுதுவோம்டா என..ஆனா குடும்பத்த இங்க விட்டுட்டு பணத்தை துரத்தில் ஹெல்த் ஸ்பாயில் பண்றோம்ன்னு நினைச்சா கஸ்டமா இருக்கு..
உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க
Wednesday, September 02, 2009
சமீபத்திய எரிச்சல்:
ரீமிக்ஸ் பாடல் னு ஒரு கலாச்சாரம் ஃப்ளூவை விட வேகமா பரவுது. லேட்டெஸ்ட்டா அப்படி ஒண்ணு வந்துருக்கு.. அலைகள் ஓய்வதில்லை பாடலான ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. அதை வைகைனு ஒரு படத்துக்கு அப்படியே போட்டிருக்காங்க.. ரீமிக்ஸ்னு வெற சொல்றாங்க.. கொடுமை டா சாமியோவ்.. அந்த ஹீரோவும் ஹீரோயினும் மானாட மயிலாட கோஷ்டி போல.. என் பொண்டாட்டி உய்யினு விஸிலடிக்குது ..
இன்னொரு ரீமிக்ஸ் நம்ம சார்மிங்க் ஹீரோ ஸ்ரீகாந்த் படத்துல வந்துருக்கு யாராது கேட்டீங்களா .. பாவம் சிவாஜியும் எம்.எஸ் ஸும்
இதை துவக்கி வச்சது ஏஆர் ரஹ்மான்னு தான் நினைக்கிறேன்.. ஆனா இது வரைக்கும் ஏஆர் போட்ட ரெண்டு ரீமிக்ஸும் அசத்தலானது.. நல்லாவும் இருந்தது. இப்போ வர பாடல்கள் சத்தம் ஓவராவும் மொட்டைகள் கேமராவை பார்த்து கை நீட்டுவதும் தான் அதிகமா இருக்கு
தொட்டால் பூ மலரும் ஸாங்க் தான் முதல் ரீமிக்ஸ் தமிழ்லனு நினைக்கிறேன் அதுக்கு முன்னாடி ஊரை தெரிஞ்சுகுட்டேன் கண்மணிய கண்ணம்மானு விசு சம்சாரம் அது மின்சாரம்ல உல்ட்டா பண்ணிருப்பாரு.
கவிதை குண்டர்ல வர தனியேன்னு ஒரு ஸாங்க் யாராவது பாத்திருக்கீங்களா.. அது தான் இப்போ அடிக்கடி முனுமுனுகிறது நானு.
இன்னொரு ரீமிக்ஸ் நம்ம சார்மிங்க் ஹீரோ ஸ்ரீகாந்த் படத்துல வந்துருக்கு யாராது கேட்டீங்களா .. பாவம் சிவாஜியும் எம்.எஸ் ஸும்
இதை துவக்கி வச்சது ஏஆர் ரஹ்மான்னு தான் நினைக்கிறேன்.. ஆனா இது வரைக்கும் ஏஆர் போட்ட ரெண்டு ரீமிக்ஸும் அசத்தலானது.. நல்லாவும் இருந்தது. இப்போ வர பாடல்கள் சத்தம் ஓவராவும் மொட்டைகள் கேமராவை பார்த்து கை நீட்டுவதும் தான் அதிகமா இருக்கு
தொட்டால் பூ மலரும் ஸாங்க் தான் முதல் ரீமிக்ஸ் தமிழ்லனு நினைக்கிறேன் அதுக்கு முன்னாடி ஊரை தெரிஞ்சுகுட்டேன் கண்மணிய கண்ணம்மானு விசு சம்சாரம் அது மின்சாரம்ல உல்ட்டா பண்ணிருப்பாரு.
கவிதை குண்டர்ல வர தனியேன்னு ஒரு ஸாங்க் யாராவது பாத்திருக்கீங்களா.. அது தான் இப்போ அடிக்கடி முனுமுனுகிறது நானு.
சில கேள்விகள் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
இந்த டபுள் ஆக்டு ஐடியா வை கண்டு புடிச்சவங்க நம்ம ஆட்களா ,ஆங்கில படங்களில் இந்த டபுள் ஆக்ட் சமாச்சாரங்கள் உண்டா அதுவும் அப்பாவும் மகனும் ஒரே மாதிரி இருக்குறது போல கதைகள் உண்டா?
Tuesday, September 01, 2009
போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா
போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா அதுவும் உங்கள் பிறந்த நாள் அன்று ....ஹி ஹி நான் மாட்டியிருக்கிறேன்(கிரேட் டா gkp நீ..)..சரி கைத்தட்டுனது போதும் நிப்பாட்டுங்க!!..
கிபி 2000 (கொசுவர்த்தி எல்லாம் இல்லைங்க இது குட்நைட் தான்!!)நிறைய இளைஞர்கள் தமிழகத்தில் SI ஆக நியமிக்கப்பட்டார்கள்..அதுவும் திருநெல்வேலியில் பெரும்பாலோன ஊர்களில் எல்லாம் இளைஞர்கள் புத்தும் புது இளைஞர்கள்..ஆக்ரோஷமான,விரைந்து செயல்படும் இளைஞர்கள்
எங்கள் ஊருக்கு வந்த அந்த SI வந்த முதல் நாளிலிருந்து தன் வேலையை ஆரம்பித்திருந்தார்..எங்கள் ஊர் கிரமாமாததால் சில பெரிய மனுஷன்கள் ரவுடியிசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்..சினிமா அளவு டாடா சுமா,கையெறிகுண்டு இல்லையென்றாலும்.. ஓரளவிற்கு தொல்லைப்பண்ணிகொண்டிருந்தார்கள்..அப்படிப்பட்ட ஒரு பெரிய மனுஷனை இவர் விரட்டி விரட்டி பாடாய்படுத்த அவர் தலைமறைவானார்..ஊர்காவல் படை என்று ஒன்றை நிறுவி ஊரில் வெட்டியாக சுத்தி கொண்டிருந்த பசங்களுக்கு லத்தி கொடுத்து தேராட்டத்திலும் அம்மன் கோவில் கொடையிலும் இரவு ரோந்துக்கும் பயன்படுத்தினார்...
அவருக்கு 'படையப்பா' என எங்கள் ஊர் மக்கள் பேர் வைத்திருந்தார்கள்..என்ன காரணமென்று தெரியல்..அவரது புல்லட்டின் பின் எப்போது பச்சை மட்டை வைத்திருப்பார்..பெரியவனா சிறியவனா என பார்க்காமல் எல்லாரையும் சவட்டினார்...ஊர் அமைதியாக இருந்தது...'பச்சை மட்டை படையப்பா' எனவும் அவரை அழைத்தார்கள்...
ரோட்டோர கடைகளில் உட்கார்ந்து வெட்டி அரைட்டை அடித்துக்கொண்டிருந்த நாங்கள் இவரது புல்லட்டின் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தோம்..அப்போது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..பிறந்த நாள் அதுவுமா அம்மா அப்பா காலில் விழுந்து ,அப்பா கொடுத்த அம்பது ரூபாய் புது டிரஸ்ஸடன் பிசிக்ஸ் டியூசன் போனேன்...
எல்லாமே நல்லாதாய் தான் நடந்த கொண்டிருந்தது..என் வீட்டிலிருந்த HERO PUCH ல் தான் எல்லா இடத்துக்கும் போவேன்..அந்த வண்டியை விற்க வேண்டும் HERO HONDA வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் எருமைமாடு பசங்களை ஏற்றிகொண்டு காட்டுத்தனமாய் ராம நதி டேம் ரோட்டில்..இல்ல இல்ல கல் ரோட்டில் ஓட்டுவேன்..அப்படியும் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தது
சம்பவம் நடந்த அன்று(என்னா பில்ட் அப்பு)எனக்கு பிறந்த நாள் டிசம்பர் 8 , காலையில் அம்மா,அப்பா காலில் விழுந்து, அக்கா வாங்கி வைத்திருந்த டி சர்ட்டை போட்டுக்கிட்டு ஹீரோ புக்கை கிளப்பி பிசிக்ஸ் டியூசன் போனேன்(பிசிக்ஸ் எனக்கு பிடித்த சப்ஜெக்ட் அதில் நான் செண்டம் வாங்கினேன் என்பதெல்லாம் அவுட் ஸ்கோப் ஆப் திஸ் போஸ்ட்!!)
டியூசன் பக்கம் தான் பஸ் ஸ்டாண்டு அதன் எதிரே போலீஸ் ஸ்டேசன்...பிறந்த நாள் உற்சாகத்தில் நடந்து போனவங்களை 'மாப்பி வாடா பஸ்ஸ்டாண்டுல இறக்கி விடுறேன்' வாண்டடா சனியனை சங்கு ஊதி கூப்பிட்டேன...மூன்று பேரும் என் வண்டியில் பஸ் ஸ்டாண்டு போய் இறங்கி அவங்களை இறக்கி விட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினேன்..
அலைபாயுதே வந்திருந்த நேரம் ..என்றென்று புன்னகை பாட பல்சரோ,ஹோண்டாவோ வேணும் ஹீரோ புக்கில் வானுயர்ந்த சோலையிலே தான் பாடிட்டு போக முடியும்..ஏதோ பாடிட்டு போயிக்கினே இருந்தேன்..என் வீட்டு பக்கத்துல போய்ட்டேன்..திடீர்ன்னு என்னை முந்த ஒரு வண்டி போச்சு அதில் பின்னாடி நான் இறக்கி விட்ட மாப்பு உட்கார்ந்திருந்தான்..'என்னடா மாப்பி' ன்னு கேட்டு அப்புறமா தான் பார்த்தேன் முன்னாடி ஆப்பு உட்கார்ந்திருந்தை..
SI:'டேய் வண்டிய நிறுத்துடா..கூப்பிட்டா நிக்க மாட்டியோ'(போலீஸ்கார் போலீஸ்கார் நீங்க் என்னை எப்போ கூப்பிட்டீங்க!!!)
நான்: @##(#)@#)
SI: டிரிபிள்ஸ் ஏத்திட்டு நீ ஸ்டேசன் முன்னாடி போவ அவ்ளோ பெரிய ஆளா நீ
நான்: அப்படி எல்லாம் இல்ல சார்...பில்டிங் பேஸ்மெண்ட் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தது..
SI:வாடா வண்டிய எடுத்துக்கிடு என மாப்பை இறங்கி என் வண்டியில் ஏறச் சொல்லிட்டு ஸ்டேசனுக்கு போனார்..
நான் வண்டியை எப்படி ஓட்டினேன் என தெரியல..அவர் பின்னாடியே போனேன்..ஊரே வேடிக்கை பார்த்தது...ஏண்டா மாப்பு எதுக்குடா என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அறிவே கிடையாதா??
இல்லடா அவர் பஸ் ஏற போற நேரத்துல கையும் களவுமா பிடிச்சி உன் வீடு எங்கேன்னு கேட்டு கூட்டிட்டு வந்துட்டாருடா...அவர் மிரட்டுனதா உச்சா போகாகது தான் குறை!!
எனக்கும் கண்ணீர் கண்ணில் 'ரெடி ஸ்டார்ட்' சொன்னால் கொட்டி விடும் அளவு நிறைந்திருந்தது..
ஸ்டேசன் போய் என்கிட்ட லைசன்ஸ்,ஆர் சி எதுவும் இல்லாததை தெரிந்து இன்னும் அவர் பி பி உயர..அதுக்குள் எங்க நைனாவுக்கு நியூஸ் கிடைத்து கம்பெனியில் இருந்து ஊரில் செல்வாக்குள்ள சிறு தலைவர்களுடன் 'பாட்ச்சா பாட்ச்சா' பேக்ரவுண்டில் வர .எனக்கு இப்போ SI மேல இருந்த பயம் போய் அப்பா என்ன சொல்ல போறாரோன்னு சேக் ஆக ஆரம்பித்தது..
அப்பா பீடி கம்பெனி மானேஜர் ஆதாலால் ஊரில் நல்ல மதிப்பிருந்தது எங்க ஊரு பக்கம் பீடித்தொழில் தான் முதன்மை தொழில்..அப்பாவுடன் வந்திருந்த பெரியவர்கள் எஸ் ஐயுடன் பேசினார்கள்..அவரோ டென்சனாவே பதில் சொன்னாரு
நோ பார்க்கிங்க்,வித் அவுட் லைசன்ஸ், ஆர்சி புக், டிரிபிள் போனதுன்னு 4 கேஸ் போடுவேன் , 1500 பைன் கட்டனும் என்றெல்லாம் மிரட்டினார்..என் அண்ணன் பெயரில் தான் ஆர்சி புக்,லைசென்ஸ் எலாமிருந்து ஆகவே கேஸ் பைல பண்ணினால் பிரச்சினையாகும், அவனுக்கு அப்போது தான் பாஸ்போர்ட் வேறு வந்திருந்தது..
என்ன பண்லாமென யோசித்துக்கொண்டிருந்த போது பார்த்தேன் என் டியூசன் பெண்கள் எலாம் ஸ்டேசன் பக்கத்திலிருந்து என் வகுப்பு பெண்ணொருத்தி வீட்டிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு பப்பி ஷேமாகி போச்சு.....இதற்குள் எஸ் ஐக்கு ஏதோ போன் வர 100 ரூ பைன் கட்டிட்டு போங்க அந்த பார்ம்ல கையெழுத்து போட்டுட்டு போங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்
ரைட்டரும் 50 ரூபாய் போதும் சார், ஹி ஹி டீ குடிக்க எனவும் காலையில் காலில் விழுந்து வாங்கிய 50 ரூபாயை எடுத்து நீட்டி நல்ல பேர் வாங்கிக்கொள்ளலாம் என பார்த்தால் அப்பா என பார்த்து முறைத்துக்கொண்டே வெளியேறி விட்டார் இதற்குள் அண்ணன் வந்து விட அவனுடன் வீட்டுக்கு போனேன் என்னை அண்ணாவும் அக்காவும் சாமி ரூமிலியே வைத்து அடைகாத்தார்கள் அப்பா கோவம் தீரும் வரை..
அதற்கு பின் அந்த எஸ் ஐ பார்த்தாலே வயிற்றுக்குள் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும் நாளாக நாளாக அவர் மீது நிறைய புகார்கள் வரத்துவங்கின, பொண்டாட்டிய ரோட்டில் போட்டு ஒரு நாள் அடித்தார் எனவும் , நிறைய பெருந்தலைகளிடம் பணம் வாங்கினார் என்றும்..ஒரு நாள் அவரை சிலர் மறைவாக இருந்து கல்லெறிந்து தாக்கியதில் காயமாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தார் எனவும் கேள்விப்பட்டேன்
கல்லூரி முதல் வருட விடுமுறையில் ஊருக்கு போயிருந்த போது ஒரு நாள் என் வீட்டு வாசலில் அப்பாவுடன் ஏதோ கம்பெனி கேஸ் விஷமாக பேசிக்கொண்டிருந்தார் , அப்போது அவரிடன் எந்த கடுமையும் இல்லை , அப்பா இது என் கடைசி பையன் என அறிமுகப்படுத்த 'நல்லா படிக்கிறியா' என கேட்ட படி எங்கள் வீட்டு மாதுளை செடியிலிருந்து பழம் ஒன்றை பறித்து சாப்பிட்டுக்கொண்டே சென்று விட்டார்...அப்போது ஏனோ தெரியலை எனக்கு பயமாவேயில்லை...
கிபி 2000 (கொசுவர்த்தி எல்லாம் இல்லைங்க இது குட்நைட் தான்!!)நிறைய இளைஞர்கள் தமிழகத்தில் SI ஆக நியமிக்கப்பட்டார்கள்..அதுவும் திருநெல்வேலியில் பெரும்பாலோன ஊர்களில் எல்லாம் இளைஞர்கள் புத்தும் புது இளைஞர்கள்..ஆக்ரோஷமான,விரைந்து செயல்படும் இளைஞர்கள்
எங்கள் ஊருக்கு வந்த அந்த SI வந்த முதல் நாளிலிருந்து தன் வேலையை ஆரம்பித்திருந்தார்..எங்கள் ஊர் கிரமாமாததால் சில பெரிய மனுஷன்கள் ரவுடியிசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்..சினிமா அளவு டாடா சுமா,கையெறிகுண்டு இல்லையென்றாலும்.. ஓரளவிற்கு தொல்லைப்பண்ணிகொண்டிருந்தார்கள்..அப்படிப்பட்ட ஒரு பெரிய மனுஷனை இவர் விரட்டி விரட்டி பாடாய்படுத்த அவர் தலைமறைவானார்..ஊர்காவல் படை என்று ஒன்றை நிறுவி ஊரில் வெட்டியாக சுத்தி கொண்டிருந்த பசங்களுக்கு லத்தி கொடுத்து தேராட்டத்திலும் அம்மன் கோவில் கொடையிலும் இரவு ரோந்துக்கும் பயன்படுத்தினார்...
அவருக்கு 'படையப்பா' என எங்கள் ஊர் மக்கள் பேர் வைத்திருந்தார்கள்..என்ன காரணமென்று தெரியல்..அவரது புல்லட்டின் பின் எப்போது பச்சை மட்டை வைத்திருப்பார்..பெரியவனா சிறியவனா என பார்க்காமல் எல்லாரையும் சவட்டினார்...ஊர் அமைதியாக இருந்தது...'பச்சை மட்டை படையப்பா' எனவும் அவரை அழைத்தார்கள்...
ரோட்டோர கடைகளில் உட்கார்ந்து வெட்டி அரைட்டை அடித்துக்கொண்டிருந்த நாங்கள் இவரது புல்லட்டின் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தோம்..அப்போது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..பிறந்த நாள் அதுவுமா அம்மா அப்பா காலில் விழுந்து ,அப்பா கொடுத்த அம்பது ரூபாய் புது டிரஸ்ஸடன் பிசிக்ஸ் டியூசன் போனேன்...
எல்லாமே நல்லாதாய் தான் நடந்த கொண்டிருந்தது..என் வீட்டிலிருந்த HERO PUCH ல் தான் எல்லா இடத்துக்கும் போவேன்..அந்த வண்டியை விற்க வேண்டும் HERO HONDA வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் எருமைமாடு பசங்களை ஏற்றிகொண்டு காட்டுத்தனமாய் ராம நதி டேம் ரோட்டில்..இல்ல இல்ல கல் ரோட்டில் ஓட்டுவேன்..அப்படியும் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தது
சம்பவம் நடந்த அன்று(என்னா பில்ட் அப்பு)எனக்கு பிறந்த நாள் டிசம்பர் 8 , காலையில் அம்மா,அப்பா காலில் விழுந்து, அக்கா வாங்கி வைத்திருந்த டி சர்ட்டை போட்டுக்கிட்டு ஹீரோ புக்கை கிளப்பி பிசிக்ஸ் டியூசன் போனேன்(பிசிக்ஸ் எனக்கு பிடித்த சப்ஜெக்ட் அதில் நான் செண்டம் வாங்கினேன் என்பதெல்லாம் அவுட் ஸ்கோப் ஆப் திஸ் போஸ்ட்!!)
டியூசன் பக்கம் தான் பஸ் ஸ்டாண்டு அதன் எதிரே போலீஸ் ஸ்டேசன்...பிறந்த நாள் உற்சாகத்தில் நடந்து போனவங்களை 'மாப்பி வாடா பஸ்ஸ்டாண்டுல இறக்கி விடுறேன்' வாண்டடா சனியனை சங்கு ஊதி கூப்பிட்டேன...மூன்று பேரும் என் வண்டியில் பஸ் ஸ்டாண்டு போய் இறங்கி அவங்களை இறக்கி விட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினேன்..
அலைபாயுதே வந்திருந்த நேரம் ..என்றென்று புன்னகை பாட பல்சரோ,ஹோண்டாவோ வேணும் ஹீரோ புக்கில் வானுயர்ந்த சோலையிலே தான் பாடிட்டு போக முடியும்..ஏதோ பாடிட்டு போயிக்கினே இருந்தேன்..என் வீட்டு பக்கத்துல போய்ட்டேன்..திடீர்ன்னு என்னை முந்த ஒரு வண்டி போச்சு அதில் பின்னாடி நான் இறக்கி விட்ட மாப்பு உட்கார்ந்திருந்தான்..'என்னடா மாப்பி' ன்னு கேட்டு அப்புறமா தான் பார்த்தேன் முன்னாடி ஆப்பு உட்கார்ந்திருந்தை..
SI:'டேய் வண்டிய நிறுத்துடா..கூப்பிட்டா நிக்க மாட்டியோ'(போலீஸ்கார் போலீஸ்கார் நீங்க் என்னை எப்போ கூப்பிட்டீங்க!!!)
நான்: @##(#)@#)
SI: டிரிபிள்ஸ் ஏத்திட்டு நீ ஸ்டேசன் முன்னாடி போவ அவ்ளோ பெரிய ஆளா நீ
நான்: அப்படி எல்லாம் இல்ல சார்...பில்டிங் பேஸ்மெண்ட் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தது..
SI:வாடா வண்டிய எடுத்துக்கிடு என மாப்பை இறங்கி என் வண்டியில் ஏறச் சொல்லிட்டு ஸ்டேசனுக்கு போனார்..
நான் வண்டியை எப்படி ஓட்டினேன் என தெரியல..அவர் பின்னாடியே போனேன்..ஊரே வேடிக்கை பார்த்தது...ஏண்டா மாப்பு எதுக்குடா என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அறிவே கிடையாதா??
இல்லடா அவர் பஸ் ஏற போற நேரத்துல கையும் களவுமா பிடிச்சி உன் வீடு எங்கேன்னு கேட்டு கூட்டிட்டு வந்துட்டாருடா...அவர் மிரட்டுனதா உச்சா போகாகது தான் குறை!!
எனக்கும் கண்ணீர் கண்ணில் 'ரெடி ஸ்டார்ட்' சொன்னால் கொட்டி விடும் அளவு நிறைந்திருந்தது..
ஸ்டேசன் போய் என்கிட்ட லைசன்ஸ்,ஆர் சி எதுவும் இல்லாததை தெரிந்து இன்னும் அவர் பி பி உயர..அதுக்குள் எங்க நைனாவுக்கு நியூஸ் கிடைத்து கம்பெனியில் இருந்து ஊரில் செல்வாக்குள்ள சிறு தலைவர்களுடன் 'பாட்ச்சா பாட்ச்சா' பேக்ரவுண்டில் வர .எனக்கு இப்போ SI மேல இருந்த பயம் போய் அப்பா என்ன சொல்ல போறாரோன்னு சேக் ஆக ஆரம்பித்தது..
அப்பா பீடி கம்பெனி மானேஜர் ஆதாலால் ஊரில் நல்ல மதிப்பிருந்தது எங்க ஊரு பக்கம் பீடித்தொழில் தான் முதன்மை தொழில்..அப்பாவுடன் வந்திருந்த பெரியவர்கள் எஸ் ஐயுடன் பேசினார்கள்..அவரோ டென்சனாவே பதில் சொன்னாரு
நோ பார்க்கிங்க்,வித் அவுட் லைசன்ஸ், ஆர்சி புக், டிரிபிள் போனதுன்னு 4 கேஸ் போடுவேன் , 1500 பைன் கட்டனும் என்றெல்லாம் மிரட்டினார்..என் அண்ணன் பெயரில் தான் ஆர்சி புக்,லைசென்ஸ் எலாமிருந்து ஆகவே கேஸ் பைல பண்ணினால் பிரச்சினையாகும், அவனுக்கு அப்போது தான் பாஸ்போர்ட் வேறு வந்திருந்தது..
என்ன பண்லாமென யோசித்துக்கொண்டிருந்த போது பார்த்தேன் என் டியூசன் பெண்கள் எலாம் ஸ்டேசன் பக்கத்திலிருந்து என் வகுப்பு பெண்ணொருத்தி வீட்டிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு பப்பி ஷேமாகி போச்சு.....இதற்குள் எஸ் ஐக்கு ஏதோ போன் வர 100 ரூ பைன் கட்டிட்டு போங்க அந்த பார்ம்ல கையெழுத்து போட்டுட்டு போங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்
ரைட்டரும் 50 ரூபாய் போதும் சார், ஹி ஹி டீ குடிக்க எனவும் காலையில் காலில் விழுந்து வாங்கிய 50 ரூபாயை எடுத்து நீட்டி நல்ல பேர் வாங்கிக்கொள்ளலாம் என பார்த்தால் அப்பா என பார்த்து முறைத்துக்கொண்டே வெளியேறி விட்டார் இதற்குள் அண்ணன் வந்து விட அவனுடன் வீட்டுக்கு போனேன் என்னை அண்ணாவும் அக்காவும் சாமி ரூமிலியே வைத்து அடைகாத்தார்கள் அப்பா கோவம் தீரும் வரை..
அதற்கு பின் அந்த எஸ் ஐ பார்த்தாலே வயிற்றுக்குள் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும் நாளாக நாளாக அவர் மீது நிறைய புகார்கள் வரத்துவங்கின, பொண்டாட்டிய ரோட்டில் போட்டு ஒரு நாள் அடித்தார் எனவும் , நிறைய பெருந்தலைகளிடம் பணம் வாங்கினார் என்றும்..ஒரு நாள் அவரை சிலர் மறைவாக இருந்து கல்லெறிந்து தாக்கியதில் காயமாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தார் எனவும் கேள்விப்பட்டேன்
கல்லூரி முதல் வருட விடுமுறையில் ஊருக்கு போயிருந்த போது ஒரு நாள் என் வீட்டு வாசலில் அப்பாவுடன் ஏதோ கம்பெனி கேஸ் விஷமாக பேசிக்கொண்டிருந்தார் , அப்போது அவரிடன் எந்த கடுமையும் இல்லை , அப்பா இது என் கடைசி பையன் என அறிமுகப்படுத்த 'நல்லா படிக்கிறியா' என கேட்ட படி எங்கள் வீட்டு மாதுளை செடியிலிருந்து பழம் ஒன்றை பறித்து சாப்பிட்டுக்கொண்டே சென்று விட்டார்...அப்போது ஏனோ தெரியலை எனக்கு பயமாவேயில்லை...
Monday, August 31, 2009
Thursday, August 27, 2009
புரியாத புதிர் சரித்திரம்
இந்தியனின் குடியுரிமைகள்
மஞ்சள் நதி
மூன்றாம் உலக போர்
சிந்து சமவெளி நாகரிகம்
தீபகற்பம் தீவு
இந்துமகா சமுத்திரம்
ஹிரோஷிமா நாகசாகி
அசோகர் பிம்பிசாரர்
அட்ச தீர்க ரேகைகள்
பனாமா கால்வாய்
ஜாலியன் வாலாபாத்
பாலகங்காதர திலகர்
நியாண்டர்தால் மனிதன்
புரியாத புதிர் சரித்திரம்....
மஞ்சள் நதி
மூன்றாம் உலக போர்
சிந்து சமவெளி நாகரிகம்
தீபகற்பம் தீவு
இந்துமகா சமுத்திரம்
ஹிரோஷிமா நாகசாகி
அசோகர் பிம்பிசாரர்
அட்ச தீர்க ரேகைகள்
பனாமா கால்வாய்
ஜாலியன் வாலாபாத்
பாலகங்காதர திலகர்
நியாண்டர்தால் மனிதன்
புரியாத புதிர் சரித்திரம்....
மின்சார ரயிலில் ஒரு நாள்
மின்சார ரயில் பற்றி என் தந்தை நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை சென்னை போய் விட்டு வந்து சிலாகித்தார், அதிலிருந்து மின்சார ரயிலை பார்க்கும் ஆசை மனதில் வளர்ந்து வந்திருக்கிறது, அதுவும் அலைபாயுதே படமும் , அதில் மின்சார ரயிலை காட்டி விதமும் மின்சார ரயிலை பற்றிய என் ஆர்வத்தை இன்னும் தூண்டியது.
வேலைத் தேடிய நாட்களில் மைலாப்பூர்-மெரினா வோடு என் பயணங்கள் அடங்கி விட்டது, நெல்லை எக்ஸ்பிரசில் ஊரிலிருந்து வரும்போது இணையாக கடந்து போகும் மின்சார ரயிலை பார்த்திருக்கிறேன்,அதன் பின் பெங்களூர் டிரயினிங் முடித்து தாம்பரத்தில் வீடு பார்த்து நண்பர்களுடன் தங்கி முதல் நாள் பரணூருக்கு ரயிலில் வந்து கடுப்பானது தான் மிச்சம்.
பரணூர்-தாம்பரம் ரயில் பயணம் 5 நாட்களிலே அலுத்து விட்டது.லோக்கல்( ஆப்பிள் ) ஐபாடுகளை காதில் பொருத்திக் கொண்டு கேட்ட பாட்டையே கேட்கும் இன்போசியான்ஸையும், லேஸும் பிஸ்கட்டும் சாப்பிட்டுக் கொண்டு க்ளுக் என்று சிரிக்கும் ஸ்லீவலஸ் பெண்களையும் பார்த்து போரடித்து விட்டது.
இரண்டு வருடமாக அரசு பேருந்தில்(ஆபிஸ் பஸ் கொடுமை சாமியோ) தான் வருகிறேன்.
உண்மையான மின்சார ரயில் பயணம் என்பது தாம்பரம் டூ பீச் தான்,ஒவ்வொரு முறையும் எவ்வளவு காட்சிகள்,எவ்வளவு அனுபவம்.முதலில் ரயில்பாடகர்கள், பெரும்பாலும் பழைய பாடல்கள் அல்லது சாமி பாடல்கள் பாடுவார்கள், எனக்கு தெரிந்த ஒரு ரயில் பாடகர் 'இயேசுவே எம்மை பாருங்கள்' தான் எப்போதும் பாடுவார்.
அருமையான குரல் அவர்களுள் பெரும்பாலானோருக்கு வாய்த்திருப்பது , அவர்களின் ஊனத்தை மறைத்தே விடுகிறது.சிலர் டோலக்கு போல் ஒன்றை வைத்திருப்பார்கள், சிலர் கையிலே ஒலி எழுப்பும் ஒரு விதமான இசைக்கருவியை வைத்து பாடலோடு ஒத்திசைப்பார்கள்.சினிமா பாடல் என்றால் சிவாஜி , எம் ஜி ஆர் பாடல்கள் தான் பாடுவார்கள் , டண்டணக்கா எல்லாம் பாட மாட்டார்கள்.
பல விதமான வியாபாரிகள் கொய்யா,ஆப்பிள்(காஷ்மீர் ஆப்பிள்) , சப்போட்டா (பால் சப்போட்டா), முந்திரி இப்படி நிறைய , முதலில் 3 ஆப்பிள் பத்து ரூபாய்க்கு என ஆரம்பிப்பார்கள் , யாரும் சட்டை செய்ய வில்லையெனி 5 பத்து ரூபாய் என இறங்கி வருவார்கள் , போலீசை கண்டால் இறங்கி ஓடுவார்கள்,போலீசுக்கு இவர்களை பிடிப்பது ஏதோ மாபியா கும்பலை பிடிப்பது போல ஒரு சந்தோசம் போலும், 10 அல்லது 20 ரூபாய் லஞ்சம் (இவர்களிடமும்)வாங்கி விட்டு விடுவார்கள்.
கண் தெரியாத மேஜிக்பாக்ஸ் விற்கும் வயதானவர்கள், ரிமோட் கவர்,' முப்பது நாளில் இந்தி ', ஊக்கு , ஊசி விற்பவர்கள். கடலை, சமோசா , சுண்டல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இது தவிர அந்த ரயில் பாடகனிடம் பெப்சி உங்கள் சாய்ஸ் போல தன் விருப்ப பாடலை பாடச் சொல்லி கேட்டு மகிழும் அரசு அலுவலர்கள், இவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ,இவர்கள் எப்போதும் அவர்களது மேலதிகாரியை திட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது அரசியல் பேசுவார்கள்.
நீங்கள் எப்போதாவது ரயிலில் இதையெல்லாம் கவனத்திருக்கிறீர்களா...
'திருமண வெட்கம் கன்னத்தில் தெரிய
கூச்சத்துடன் கணவனை உரசி
உட்கார்ந்திருக்கும் புதுப்பெண்
எத்தனைமுறை பயணித்திருந்தாலும்
இது தான் முதன் முறை போல
ஜன்னலில் எட்டிப்பார்க்கும் குழந்தைகள்
லாவகமாக வளையத்தில் உடலை
நுழைத்து குட்டிக்கரணம் அடித்து
பிச்சையெடுக்கும் ஏழைச் சிறுமி
இடமிருந்தாலும் இளைமையின் மிடுக்கில்
ரயிலின் வாசலில் தொங்கும்
கனவுகள் நிறைந்த இளைஞர்கள்'
நீண்ட தூர ரயில் பயணம் மட்டுமல்ல மின்சார ரயில் பயணமும் ஒரு சுகமான அனுபவம் தான்
வேலைத் தேடிய நாட்களில் மைலாப்பூர்-மெரினா வோடு என் பயணங்கள் அடங்கி விட்டது, நெல்லை எக்ஸ்பிரசில் ஊரிலிருந்து வரும்போது இணையாக கடந்து போகும் மின்சார ரயிலை பார்த்திருக்கிறேன்,அதன் பின் பெங்களூர் டிரயினிங் முடித்து தாம்பரத்தில் வீடு பார்த்து நண்பர்களுடன் தங்கி முதல் நாள் பரணூருக்கு ரயிலில் வந்து கடுப்பானது தான் மிச்சம்.
பரணூர்-தாம்பரம் ரயில் பயணம் 5 நாட்களிலே அலுத்து விட்டது.லோக்கல்( ஆப்பிள் ) ஐபாடுகளை காதில் பொருத்திக் கொண்டு கேட்ட பாட்டையே கேட்கும் இன்போசியான்ஸையும், லேஸும் பிஸ்கட்டும் சாப்பிட்டுக் கொண்டு க்ளுக் என்று சிரிக்கும் ஸ்லீவலஸ் பெண்களையும் பார்த்து போரடித்து விட்டது.
இரண்டு வருடமாக அரசு பேருந்தில்(ஆபிஸ் பஸ் கொடுமை சாமியோ) தான் வருகிறேன்.
உண்மையான மின்சார ரயில் பயணம் என்பது தாம்பரம் டூ பீச் தான்,ஒவ்வொரு முறையும் எவ்வளவு காட்சிகள்,எவ்வளவு அனுபவம்.முதலில் ரயில்பாடகர்கள், பெரும்பாலும் பழைய பாடல்கள் அல்லது சாமி பாடல்கள் பாடுவார்கள், எனக்கு தெரிந்த ஒரு ரயில் பாடகர் 'இயேசுவே எம்மை பாருங்கள்' தான் எப்போதும் பாடுவார்.
அருமையான குரல் அவர்களுள் பெரும்பாலானோருக்கு வாய்த்திருப்பது , அவர்களின் ஊனத்தை மறைத்தே விடுகிறது.சிலர் டோலக்கு போல் ஒன்றை வைத்திருப்பார்கள், சிலர் கையிலே ஒலி எழுப்பும் ஒரு விதமான இசைக்கருவியை வைத்து பாடலோடு ஒத்திசைப்பார்கள்.சினிமா பாடல் என்றால் சிவாஜி , எம் ஜி ஆர் பாடல்கள் தான் பாடுவார்கள் , டண்டணக்கா எல்லாம் பாட மாட்டார்கள்.
பல விதமான வியாபாரிகள் கொய்யா,ஆப்பிள்(காஷ்மீர் ஆப்பிள்) , சப்போட்டா (பால் சப்போட்டா), முந்திரி இப்படி நிறைய , முதலில் 3 ஆப்பிள் பத்து ரூபாய்க்கு என ஆரம்பிப்பார்கள் , யாரும் சட்டை செய்ய வில்லையெனி 5 பத்து ரூபாய் என இறங்கி வருவார்கள் , போலீசை கண்டால் இறங்கி ஓடுவார்கள்,போலீசுக்கு இவர்களை பிடிப்பது ஏதோ மாபியா கும்பலை பிடிப்பது போல ஒரு சந்தோசம் போலும், 10 அல்லது 20 ரூபாய் லஞ்சம் (இவர்களிடமும்)வாங்கி விட்டு விடுவார்கள்.
கண் தெரியாத மேஜிக்பாக்ஸ் விற்கும் வயதானவர்கள், ரிமோட் கவர்,' முப்பது நாளில் இந்தி ', ஊக்கு , ஊசி விற்பவர்கள். கடலை, சமோசா , சுண்டல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இது தவிர அந்த ரயில் பாடகனிடம் பெப்சி உங்கள் சாய்ஸ் போல தன் விருப்ப பாடலை பாடச் சொல்லி கேட்டு மகிழும் அரசு அலுவலர்கள், இவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ,இவர்கள் எப்போதும் அவர்களது மேலதிகாரியை திட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது அரசியல் பேசுவார்கள்.
நீங்கள் எப்போதாவது ரயிலில் இதையெல்லாம் கவனத்திருக்கிறீர்களா...
'திருமண வெட்கம் கன்னத்தில் தெரிய
கூச்சத்துடன் கணவனை உரசி
உட்கார்ந்திருக்கும் புதுப்பெண்
எத்தனைமுறை பயணித்திருந்தாலும்
இது தான் முதன் முறை போல
ஜன்னலில் எட்டிப்பார்க்கும் குழந்தைகள்
லாவகமாக வளையத்தில் உடலை
நுழைத்து குட்டிக்கரணம் அடித்து
பிச்சையெடுக்கும் ஏழைச் சிறுமி
இடமிருந்தாலும் இளைமையின் மிடுக்கில்
ரயிலின் வாசலில் தொங்கும்
கனவுகள் நிறைந்த இளைஞர்கள்'
நீண்ட தூர ரயில் பயணம் மட்டுமல்ல மின்சார ரயில் பயணமும் ஒரு சுகமான அனுபவம் தான்
சுஜாதா வாரம் -5 ....சுஜாதாவின் கட்டுரை
இன்றோடு முடிகிறது சுஜாதா வாரம்..இது வரை படித்தவர்களுக்கு நன்றி இதையெல்லாம் என்னோட பாவரைட் கட்டுரை இதோ
................
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
நன்றி: ஆனந்த விகடன்
................
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
நன்றி: ஆனந்த விகடன்
Subscribe to:
Posts (Atom)

