1
பாம்புகள் பிண்ணி பிணைந்துக் கொண்டிருந்த
அந்த பின்மதிய வேளையில் தான் ஜெயாக்காவுக்கு வலிகண்டது
பிறவி ஊமையான அவளின் ஓலம்
அமானுஷ்யம் கலந்ததாயிருந்தது
குழந்தை வெளிவந்து நஞ்சு சிக்கி
ஜெயக்கா இறந்து போது
பெருங்குரலெடுத்து அழுத பூத்தாயிக்கிழவியின் அலறலில்
பாம்புகள் விருட்டென பிரிந்து புதருக்குள் புகுந்தன
2
அவன் அசிங்கத்தை மிதித்து விட்டான்
யாரும் கவனிக்க வில்லை என்று உறுதிப்படுத்திய பின்
காலை உதற ஆரம்பித்தான்
Saturday, February 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)


1 கருத்துக்கள்:
thala nalla iruku, vanakkam
Post a Comment